திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் பெற்ற வாக்கு விபரம்

2011  சட்டமன்றத் தேர்தலில் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் பெற்ற வாக்கு விபரம்

Tamil Nadu - Thiruporur
Result Declared
Candidate PartyVotes
K. MANOHARANAll India Anna Dravida Munnetra Kazhagam84169
K. ARUMUGAMPattali Makkal Katchi65881
G. SIVALINGAMPuratchi Bharatham1598
N. GOPALAKRISHNANBharatiya Janata Party1579
G. RAJAMUTHUIndependent1367
S. ANANDBABUIndependent902
S. SARAVANANBahujan Samaj Party807
V. SELAMIndependent603
K. V. PAKKIRI AMBEDKARJharkhand Mukti Morcha (Ulgulan)352
V. PRABAKARANIndependent334
V. BALULok Jan Shakti Party242
P. DEVARAJIndependent230
P. GUNASEKARANIndependent214
B. AJESHIndependent202
K. HARIIndependent159

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாமகவின் வெற்றி வாய்ப்பு

            காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தி.மு.க., கூட்டணியில் தி.மு.க., - பா.ம.க., - காங்கிரஸ் தலா 3 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டன. அ.தி.மு.க., கூட்டணியில் அ.தி.மு.க., 9 தொகுதிகளிலும், தே.மு.தி.க., இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டன. 

ஓட்டுப்பதிவு சதவீத அடிப்படையில் தொகுதிகளின் தற்போதைய நிலவர விவரம்

 காஞ்சிபுரம்: 

            பட்டுச் சேலைக்கு புகழ் பெற்ற காஞ்சிபுரம், அண்ணாதுரை பிறந்த ஊர். இத்தொகுதியில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 539 ஆண்கள், 1 லட்சத்து 20 ஆயிரத்து 235 பெண்கள், 17 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 791 வாக்காளர்கள் உள்ளனர். 


            தேர்தலில், 96 ஆயிரத்து 387 ஆண்கள், 94 ஆயிரத்து 96 பெண்கள் என மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரத்து 433 வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர். ஓட்டுப்பதிவு 80.11 சதவீதம்.

             அ.தி.மு.க., அதிக முறை வெற்றி பெற்ற தொகுதி. இரண்டாவது முறையாக தொகுதி பா.ம.க.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு, 1962ம் ஆண்டு தேர்தலில் 88.18 சதவீதம் ஓட்டுகள் பதிவான போது, இத்தொகுதியில் அண்ணாதுரை தோல்வி அடைந்தது பழைய வரலாறு. பா.ம.க., வேட்பாளர் உலகரட்சகன் சமுதாய பலத்தை நம்பியுள்ளார்.  சுயேச்சை வேட்பாளரான கல்வியாளர் ராதாகிருஷ்ணன் பெறும் ஓட்டு, யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் தொடர்கிறது.


உத்திரமேரூர்: 


               இத்தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. இத்தொகுதியில் 96 ஆயிரத்து 753 ஆண்கள், 97 ஆயிரத்து 426 பெண்கள், 17 திருநங்கைகள் என மொத்தம் 1 லட்சத்து 94 ஆயிரத்து 196 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில், 84 ஆயிரத்து 728 ஆண்கள், 82 ஆயிரத்து 910 பெண்கள் என மொத்தம் 1 லட்சத்து 67 ஆயிரத்து 368 வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர்.


            அ.தி.மு.க., வேட்பாளர் கணேசன் தொகுதியில் நன்கு அறிமுகமானவர். அனைவரிடமும் கட்சிப் பாகுபாடின்றி பழகுபவர். ஆளும் கட்சி மீதான மக்கள் அதிருப்தி, எம்.எல்.ஏ., சுந்தருக்கு சீட் கொடுக்காதது, தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவருக்கு சீட் கொடுத்தது ஆகியவற்றால் வெற்றி என் பக்கம் என்ற நம்பிக்கையுடன் கணேசன் உள்ளார். பா.ம.க., செல்வாக்கு தன்னை கரை சேர்க்கும் என பொன்.குமார் நம்புகிறார்.
செய்யூர் (தனி): 


            மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய தொகுதி. தொழிற்சாலைகள் அதிகம் இல்லாத பகுதி. அச்சரப்பாக்கம் தொகுதியை நீக்கிவிட்டு புதிதாக உருவாக்கப்பட்டது. இத்தொகுதியில் 88 ஆயிரத்து 293 ஆண்கள், 85 ஆயிரத்து 554 பெண்கள், 17 திருநங்கைகள் என மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 864 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில், 73 ஆயிரத்து 88 ஆண்கள், 68 ஆயிரத்து 931 பெண்கள் என மொத்தம் 1 லட்சத்து 42 ஆயிரத்து 19 வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பார்வேந்தன் ஏற்கனவே இப்பகுதியை உள்ளடக்கிய அச்சரப்பாக்கம் தொகுதியில், பா.ம.க., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். 
மதுராந்தகம் (தனி): 


               கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி. இத்தொகுதியில் 90 ஆயிரத்து 472 ஆண்கள், 89 ஆயிரத்து 971 பெண்கள், 13 திருநங்கைகள் என மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 456 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில், 75 ஆயிரத்து 86 ஆண்கள், 72 ஆயிரத்து 311 பெண்கள் என மொத்தம் 1 லட்சத்து 47 ஆயிரத்து 397 வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர். இரு கட்சி வேட்பாளர்களும் தொகுதிக்கு புதிது. அ.தி.மு.க.,விற்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் கூட்டணி பலம் காரணமாக அக்கட்சி வேட்பாளர் கணிதா சம்பத் தெம்பாக உள்ளார். தி.மு.க., ஓட்டு தன்னை கைவிடாது என காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் நம்புகிறார்.


செங்கல்பட்டு: 


            மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள இத்தொகுதியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 449 ஆண்கள், 1 லட்சத்து 24 ஆயிரத்து 853 பெண்கள், 53 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 355 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் 96 ஆயிரத்து 536 ஆண்கள், 89 ஆயிரத்து 982 பெண்கள் என மொத்தம் 1 லட்சத்து 86 ஆயிரத்து 518 பேர் ஓட்டளித்துள்ளனர்.


                கூட்டணி பலம், சமுதாய செல்வாக்கு ஆகியவற்றால் பா.ம.க., வேட்பாளர் ரங்கசாமி தெம்பாக உள்ளார். அ.தி.மு.க., தயவில் வெற்றி பெற்று விடலாம் என தே.மு.தி.க., வேட்பாளர் முருகேசன் நம்புகிறார்.


திருப்போரூர்: 


           இத்தொகுதியில் 97 ஆயிரத்து 350 ஆண்கள், 94 ஆயிரத்து 643 பெண்கள், 7 திருநங்கைகள் என மொத்தம் 1 லட்சத்து 92 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அ.தி.மு.க., சார்பில் மனோகரன், பா.ம.க., சார்பில் எம்.எல்.ஏ., ஆறுமுகம் போட்டியிட்டனர். டந்த முறை பா.ம.க., வெற்றி பெற்ற தொகுதி. எனவே, இம்முறையும் வெற்றி வசப்படும் என்ற நம்பிக்கையில் பா.ம.க.,வினர் உள்ளனர். எனினும், கூட்டணி பலம் காரணமாக வெற்றி நமதே என அ.தி.மு.க.,வினர் வலம் வருகின்றனர்.

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகத்துக்கு, பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வாக்கு சேகரிப்பு

மாமல்லபுரம்:

          தி.மு.க., கூட்டணி வெற்றிக் கூட்டணி மட்டுமல்ல, சமூக நீதி கூட்டணி,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். 

திருப்போரூர்  தொகுதி பா.ம.க., வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து, திருக்கழுக்குன்றத்தில் நேற்று முன்தினம் இரவு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியது:

              தி.மு.க., தலைமையிலான எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி மட்டுமல்ல, சமூக நீதி கூட்டணி. சமுதாயங்கள் இணைந்த கூட்டணி. இப்பகுதியில் சில இளைஞர்களின் விரும்பத்தகாத செயல்களால், பிரச்னை ஏற்பட்டது; அது மறக்கப்பட்டது. பா.ம.க., தோழர்கள், விடுதலை சிறுத்தைகளின் கொடியையும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்கள் பா.ம.க., கொடியையும் மாற்றி மாற்றி பிடித்திருப்பதைக் காண்கிறேன். சமூக மாற்றம், நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக 30 ஆண்டுகளாக பாடுபட்டு வந்தேன். நானும், திருமாவளவனும் இணைந்திருப்பது அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றிபெறச் செய்யும்.
 

             நாம் நிறுத்தியவர்களை அவர்கள் வெற்றிபெறச் செய்வர். நாம் சேர்ந்து தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி பெறச் செய்வோம். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை வெற்றி பெறச் செய்வோம். மிகப்பெரும் வெற்றியும் பெறுவோம்.சில பத்திரிகைகள் அ.தி.மு.க.,விற்கு ஆதரவு இருப்பதாக எழுதுகின்றன. இங்கு சேர வேண்டிய கட்சிகள் ஒன்றாக சேர்ந்துள்ளோம். தமிழகத்தில் இது போன்ற கூட்டணி இதுவரை அமையவில்லை. இனியும் அமைக்கப்படாது.நான் 30 மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்தேன். கருணாநிதி முதல்வராவதையே மக்கள் விரும்புவதால், நமக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதுவர். மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு. எனவே, மகேசனே தீர்ப்பு எழுதப் போகிறார். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.  
              

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வாக்கு சேகரிப்பு

திருப்போரூர்:
 
          ""தாழ்த்தப்பட்டவர்களுக்காக 11 சதவீத இடஒதுக்கீட்டை 12 சதவீதமாக உயர்த்தியவர் முதல்வர் கருணாநிதி,'' என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

திருப்போரூரில் பா.ம.க., வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  பேசியது: 

             பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி, இந்த தேர்தலில்தான் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் கருணாநிதியே காரணம். ராமதாஸ், 20 ஆண்டு கனவு நிறைவேறியதாகக் கூறியுள்ளார். ஒரே அணியாக நாம் உள்ளோம். இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி, தமிழகத்தின் முதல்வராக கருணாநிதியை அமர்த்த வேண்டும். யார் எம்.எல்.ஏ., என்பது முக்கியம் அல்ல. யார் முதல்வராகிறார் என்பதே முக்கியம். சட்டம், ஆற்றல், அறிவு, நீண்ட நெடிய அனுபவம் ஆகிய அனைத்தும் கருணாநிதிக்கு மட்டுமே பொருந்தும். 

              அவர் தாழ்த்தப்பட்டவர்களுக்காக 11 சதவீத இடஒதுக்கீட்டை 12 சதவீதமாக உயர்த்தினார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 107 ஜாதிகளுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியுள்ளார். சிறுபான்மையினருக்கு 3.5 சதவீதம் வழங்கியுள்ளார். அருந்ததியினருக்கு தனியாக 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளார். அரவாணிகளையும் அரவணைத்துள்ளார். நாட்டுப்புறக் கலைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பாராட்டப்படக்கூடியவர் கருணாநிதி.
 
             ஜெயலலிதாவின் 10 ஆண்டு கால ஆட்சியில், முதல் 5 ஆண்டு சாதனையாகக் கூறப்படுவது, வளர்ப்பு மகனுக்கு 100 கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட திருமணம். இரண்டாவது ஐந்தாண்டில் ஒரு சில சாதனைகளை சொல்லலாம். கருணாநிதியை போலீசார் கொடுமைப்படுத்தி நள்ளிரவில் கைது செய்தது, வைகோவை பொடாவில் கைது செய்தது, நெடுமாறனை 18 மாதங்கள் சிறையில் வைத்தது, பா.ம.க., நிறுவனர் ராமதாசை கைது செய்தது, என்னையும் நான்கு நாட்கள் சிறையில் அடைத்தது ஆகியவற்றை சாதனையாகக் கூறலாம். அரசு ஊழியர்களை எஸ்மா, டெஸ்மா சட்டத்தின் மூலம் நீக்கியதையும் சொல்லலாம்.
 
             கருணாநிதி ஆட்சியில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம், ராமநாதபுரம் குடிநீர் திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், செம்மொழி மாநாடு ஆகியவற்றை சாதனையாகக் கூறலாம். 75 ஆண்டு கால அரசியல் அனுபவம் மிக்கவர் கருணாநிதி. அவர் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். எதிர்க்கட்சி தலைவர் போல கோடநாட்டில் குறட்டை விடுபவர் இல்லை. குறட்டை விடும் நேரத்திலும் கோப்புகளை பார்ப்பவர். மக்களுக்கு செய்த திட்டங்களை கூறி கருணாநிதி ஓட்டு சேகரிக்கிறார். ஜெயலலிதாவோ, கருணாநிதியை திட்டி, திட்டி பிரசாரம் செய்கிறார். அவரின் பிரசாரம் எடுபடாது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி பா.ம.க வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

திருப்போரூர் : 

            ""வட மாவட்டங்களில் எதிர்க்கட்சியினர் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். திருப்போரூர் தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் திருக்கச்சூர் கி.ஆறுமுகம் அறிமுகக் கூட்டம் நடந்தது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் வேட்பாளரை அறிமுகப்படுத்தி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியது


                 வட மாவட்டங்கள் எனக் கூறப்படும் 12 மாவட்டங்களில் எதிர்க்கட்சியினர் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. கிராமத்திலிருப்போர் அந்த ஊர்களில் பணியாற்ற வேண்டும். தி.மு.க., அரசு என்ன செய்தது என, எதிர்க்கட்சியினர் கேட்பர். ஒரு ரூபாய் அரிசி மூலம் பசிப் பிணியை நீக்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளாக அடிப்படை வசதிகளை செயல்படுத்தியதால் பொதுமக்கள் அனைவரும் பயனடைந்துள்ளனர். வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்போருக்கு 35 கிலோ அரிசி வழங்குவதாக முதல்வர், தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். 

                 இதை அனைவரிடத்திலும் எடுத்துச் சொல்ல வேண்டும்.கலைஞர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம், ஸ்ரீரங்கத்தில் பயன்பெற்ற ஒருவர், நாங்கள் இதுவரை அ.தி.மு.க.,விற்கு தான் ஓட்டு போட்டுள்ளோம். இம்முறை எங்கள் குடும்பத்தில் உள்ள பத்து ஓட்டுகளையும் தி.மு.க.,விற்கே போடுவோம் என்றார். கொத்து கொத்தாக ஓட்டுகள் விழ வேண்டும். அதற்கேற்ப ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு குழுவை ஏற்றபடுத்துங்கள். அந்தக் குழுவே எல்லா வேலைகளையும், பிரச்னைகளையும் சமாளிக்க வேண்டும். நமக்கு எதிரணி இருக்கு என்று கவலைப்பட வேண்டியதில்லை. மிகப் பலமான அணி நம்முடைய அணிதான். கருணாநிதி ஆறாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்பார் என, மக்களே சொல்லும் நிலை உள்ளது.

                பா.ம.க.,வுடன் விடுதலைச் சிறுத்தைகள் இணைந்திருப்பதால், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 வட மாவட்டங்களில் எதிரணியினர் ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது. களப்பணியாளர்கள் 20 பேர் தினமும் மக்களை சென்று பார்க்க வேண்டும். முதல் முறையாக இம்மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை துவக்கியுள்ளேன். மூன்றாவது முறையாக போட்டியிடும் ஆறுமுகம் 25 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் பேசினார். கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் பத்து பேரும், ராமதாசுக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர்.