
மதுரை:
உள்ளாட்சி மன்ற தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றும், தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று மதுரை சென்றார் .
உள்ளாட்சி மன்ற தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றும், தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று மதுரை சென்றார் .
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்த பேட்டி
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி இரவு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதை பார்க்கும்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வெளியிடப்பட்டதாக தெரிகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் முழுமையான பட்டியல் வெளியிடாத நிலையில் இன்று வேட்பு மனுதாக்கல் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அறிவிப்பு வந்து 14 மணி நேரத்தில் வேட்பு மனுதாக்கல் செய்யசொல்வது தமிழகத்தில் இதுதான் முதல் முறையாகவும்.
இடஒதுக்கீடு பட்டியலை முன்கூட்டியே அ.தி.மு.க.வுக்கு கொடுத்து விட்டு அத்தனை இடங்ளிலும் வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. அறிவித்தபிறகு தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு ஒரு வாரத்திற்கு பிறகுதான் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று இருக்கிறது. ஆனால் இப்போது அறிவித்து இருப்பது தேர்தல் ஜனநாயகத்துக்கு எதிரானது ஆகும். இதன் மூலம் தேர்தல் எந்த அளவுக்கு நியாயமாக நடக்கும் என்பது தெரியவில்லை இந்த உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். வேட்பு மனு தாக்கலை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். அப்போதுதான் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டி யலை தயாரிக்க நேரம் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் அரசியல் தலையீடு காரணமாக காவல்துறை பெரும்பான்மையை இழந்து வருகிறது. இந்த துறை அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்படக் கூடிய அமைப்பாக திகழ வேண்டும். சில போலீஸ் அதிகாரிகள் பொறுப்பற்ற நடவடிக்கையால்தான் பரமக்குடி துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியானார்கள். நீதி விசாரணை என்ற பெயரால் துப்பாக்கி சூட்டிற்கு காரணமான அதிகாரிகளை பணி நீக்கம் செய்து அவர்கள் மீது கடுமையான வழக்குப்போட அரசு தயங்கக்கூடாது. பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். அங்கு போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற வேண்டும். இப்படிப்பட்ட அடக்குமுறையை போலீசார் கைவிட வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடவலியுறுத்தி அப்பகுதி மக்கள் 11 நாட்கள் உண்ணாவிரம் நடத்தியதில் முதல்கட்ட வெற்றிகிடைத்துள்ளது. அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது பா.ம.க.வின் கொள்கையாகும். தமிழ் நாட்டில் ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங்கில் குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு பட்டியலை முன்கூட்டியே அ.தி.மு.க.வுக்கு கொடுத்து விட்டு அத்தனை இடங்ளிலும் வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. அறிவித்தபிறகு தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு ஒரு வாரத்திற்கு பிறகுதான் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று இருக்கிறது. ஆனால் இப்போது அறிவித்து இருப்பது தேர்தல் ஜனநாயகத்துக்கு எதிரானது ஆகும். இதன் மூலம் தேர்தல் எந்த அளவுக்கு நியாயமாக நடக்கும் என்பது தெரியவில்லை இந்த உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். வேட்பு மனு தாக்கலை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். அப்போதுதான் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டி யலை தயாரிக்க நேரம் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் அரசியல் தலையீடு காரணமாக காவல்துறை பெரும்பான்மையை இழந்து வருகிறது. இந்த துறை அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்படக் கூடிய அமைப்பாக திகழ வேண்டும். சில போலீஸ் அதிகாரிகள் பொறுப்பற்ற நடவடிக்கையால்தான் பரமக்குடி துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியானார்கள். நீதி விசாரணை என்ற பெயரால் துப்பாக்கி சூட்டிற்கு காரணமான அதிகாரிகளை பணி நீக்கம் செய்து அவர்கள் மீது கடுமையான வழக்குப்போட அரசு தயங்கக்கூடாது. பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். அங்கு போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற வேண்டும். இப்படிப்பட்ட அடக்குமுறையை போலீசார் கைவிட வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடவலியுறுத்தி அப்பகுதி மக்கள் 11 நாட்கள் உண்ணாவிரம் நடத்தியதில் முதல்கட்ட வெற்றிகிடைத்துள்ளது. அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது பா.ம.க.வின் கொள்கையாகும். தமிழ் நாட்டில் ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங்கில் குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பெரியாறு அணை பிரச்சினையில் அ.தி.மு.க. வின் நிலை என்ன? உச்சநீதி மன்றம் என்ன கூறி இருக்கிறது என்பதை விளக்க வேண்டும். வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும். யாருடனும் கூட்டணி இல்லை. ஒரு வாரத்தில் பா.ம.க. முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இருந்தபோது குறைகளை சுட்டிக்காட்டியதால் வெளியேற்றப்பட்டோம். தமிழ் நாட்டில் மக்கள் பிரச்சினைக்காக பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சேர்ந்து போராடும். இவ்வாறு அவர் கூறி னார்.
பேட்டியின்போது கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், துணைப்பொதுச்செயலாளர்கள் ரமேஷ், செந்தில்வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
பேட்டியின்போது கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், துணைப்பொதுச்செயலாளர்கள் ரமேஷ், செந்தில்வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.