பயிற்சி முகாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயிற்சி முகாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பவானி சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை: டாக்டர் ராமதாஸ்

பவானி:

        பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், பவானி சட்டமன்ற தொகுதியின் கிளை தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்களுக்கான பயிற்சி முகாம் பவானி மீனாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

             பா.ம.க.வில் கிளைக்கழகத்தில் செயலாளர் பதவியில் இருப்பவர்கள் 18 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் கட்சி பணியில் அவர்கள் வேகமாக செயல்படுவார்கள். இவர்கள் எழுத படிக்க தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். சில நடிகர்கள் கோட்டையை பிடிக்க துடிக்கிறார்கள். இவர்களை நோக்கி சென்றவர்களை நம்முடைய கட்சியில் சேர்க்க வேண்டியது ஒன்றிய, கிளைக்கழக பொறுப்பாளர்களிடம் உள்ளது. கட்சியில் சேரும் அவர்களுக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும். இதற்காக கூடுதல் பொறுப்புகளை உருவாக்க வேண்டும்.
           
                  பா.ம.க. இருக்கும் கூட்டணி தான் வெற்றி கூட்டணி. பா.ம.க. இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. கூட்டணி அமைத்து போட்டியிடும் போது, பவானி சட்டமன்ற தொகுதியை கேட்டு பெறுவோம். இந்த தொகுதியில் கடந்த முறை பெற்ற ஓட்டுகளை விட அதிக ஓட்டுகள் பெற்று, இந்த தொகுதியை மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். இதற்காக கட்சியினர் இப்போது இருந்தே தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.
             

            பாட்டாளி மக்கள் கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிடும். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. யாருடன் கூட்டணி என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

பா.ம.க.ஆட்சிக்கு வந்தால்அனைவருக்கும் இலவச கல்வி: அன்புமணி ராமதாஸ்

நெய்வேலி : 
           கடந்த 43 ஆண்டுகளாக தமிழக முதல்வர்களாக சினிமாவை சேர்ந்தவர்கள் மட்டுமே இருந்து வரும் நிலைமை மாற வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசினார். 

            கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பா.ம.க., பயிற்சி கூட்ட அரங்கம் நேற்று நடந்தது. தலைவர் மணி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., வேல்முருகன் வரவேற்றார். நிர்வாகிகள் திருமால்வளவன், வடக்குத்து ஜெகன், வைத்தியலிங்கம், சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர். 

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசியது: 

               தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளில் உள்ள வன்னியர் சொந்தங்களை பா.ம.க.,விற்கு கொண்டு வர நீங்கள் அனைவரும் போராட வேண்டும்.மதுவை ஒழிப்போம் என தி.மு.க., - அ.தி.மு.க.,வால் சொல்ல முடியுமா? ஆனால் பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு குறித்ததாகத் தான் இருக்கும். 

              அதுபோல அனைவருக்கும் இலவச கல்வி, படித்து முடித்தவுடன் இலவச வேலைவாய்ப்பு. ஆனால் வேறு எதையும் இலவசமாக வழங்க மாட்டோம். பா.ம.க.,வைத் தவிர பிற கட்சிகள் வளர்ந்து, சரிந்து, முடிந்துபோன கட்சிகள். கடந்த 43 ஆண்டுகளாக தமிழக முதல்வராக சினிமாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருந்த நிலை மாற வேண்டும். பா.ம.க., தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. நெய்வேலி தொகுதியில் பா.ம.க., தனித்து நின்றாலே ஜெயிக்கும்.

              பா.ம.க.,விற்காக உழைத்து கட்சியிலிருந்து விலகியவர்களை சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து நான் கவுரவிக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார். 

பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

           அம்பானி மகனுக்கு கிடைக்கும் தரமான அதே கல்வி, என் சமுதாய மக்களுக்கும் கிடைக்க போராடுவேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டு சாராயம் கூட இருக்காது. நமது கட்சியில் வயதானவர்கள் விலைபோய் விடுவார்கள். ஆனால் இளைஞர்கள் விலை போக மாட்டார்கள். 

           தேர்தலின்போது, கொள்ளையடித்த பணத்திலிருந்து 500, 1000 ரூபாய் என அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் உனக்கு தான் ஓட்டுப்போடுவோம் எனக்கூறி, அவர்கள் தரும் பணத்தை வாங்கி கொண்டு மாம்பழத்திற்கு ஓட்டு போடுங்கள். ஏனென்றால் அவர்கள் உங்களிடம் கொள்ளையடித்த பணத்தை தான் உங்களுக்கு திரும்பித் தருகின்றனர். இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார். 

பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர்கள், இளம்பெண்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது: பாமக நிறுவனர் ராமதாசு

புவனகிரி:

          புவனகிரி சட்டமன்ற தொகுதி பாமக கிளைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் பயிற்சி முகாம் சேத்தியாத்தோப்பில் திருமண மண்டபத்தில் நடந்தது.

பாமக நிறுவனர்  ராமதாசு கலந்துகொண்டு பேசியது .

        பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர்கள், இளம்பெண்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கட்சியில் 26, 27 வயதை கடந்தவர்கள் கிளை செயலாளர்கள் பொறுப்பில் இருந்து விடுபட வேண்டும். இளைஞர்களுக்கு வழிவிட்டு, அவர்களை வழிநடத்தி, வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

            வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிடப் போவதில்லை. ஏதாவது ஒரு கூட்டணியில் தான் போட்டியிடப் போகிறோம். கூட்டணி குறித்து முடிவு எடுக்கக் கூடிய அதிகாரத்தை கட்சி பொதுக்குழு எனக்கு வழங்கி உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் 10 நாளில் அறிவிப்பேன்.

             ஒவ்வொரு தேர்தலிலும் ராமதாசு கூட்டணி மாறுவதாக சிலர் கூறுகிறார்கள். எந்த கட்சிதான் கூட்டணி மாறவில்லை. ஆனால் நாம் கூட்டணி மாறினால் மட்டும் விமர்சிக்கிறார்கள். ஒரு தேர்தலில் ஒரு கூட்டணியில் உள்ள கட்சி, அடுத்த தேர்தலில் அந்த கூட்டணியில் இல்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்தவர்கள் தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கிறார்கள்’’ என்று தெரிவித்த்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் 5 பேர் கொண்ட குழு: பாமக நிறுவனர் ராமதாஸ்

அரியலூர்:

        அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
 
             தமிழகத்தில் 1967ம் ஆண்டுக்கு பிறகு சினிமா சம்பந்தப்பட்டவர் தான் முதல்வராகின்றனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடிகர்கள் நாடாள வேண்டும் என்று நினைக்கவில்லை. அப்படி நினைத்தாலும் போணியாகாது. விதி விலக்காக 10 ஆண்டுக்கு முன் வரை நடிகர் ராமராவ் முதல்வராக இருந்தார். இங்கு மட்டும் தான் இந்தக்கூத்து தொடர்கிறது. சினிமா நடிகர்கள் மாயையிலிருந்து இளைஞர்களை விடுவித்து பா.ம.க.,வில் அவர்களை இணைக்க, கிராமங்கள் தோறும் பா.ம.க., கிளை அலுவலகங்கள் ஏற்படுத்த வேண்டும்.

              தமிழகத்தில் 1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. 67க்குப் பிறகு திரைத் துறையிலிருந்து வந்த அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி நடத்தினர். இப்போது திரைத் துறையில் உள்ள விஜயகாந்த் போன்றோர் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். இதுபோன்ற செயலுக்கு இளைஞர்கள் வாய்ப்பளித்துவிடக் கூடாது.

             இந்த நிலையை மாற்ற பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் 5 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். கல்வி, விளையாட்டு, விவசாயம், நூலகம், மருத்துவத்துக்கு எனக் குழுக்களை அமைக்க வேண்டும். வளர்ந்து வரும் இளைஞர்களுக்கும், கிராம மக்களுக்கும் இந்தக் குழுவினர் வழிகாட்ட வேண்டும். இதுபோன்ற செயல்களை மேற்கொண்டால் இளைஞர்கள் அசைக்க முடியாத சக்தியாக இருப்பர் என்றார்.

2011-ம் ஆண்டு இளைஞர் சங்கத்தின் ஆண்டு : அன்புமணி ராமதாஸ்

தஞ்சை:

             தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களின் பா.ம.க. இளைஞர் சங்க பொறுப்பாளர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா கும்பகோணத்தில் நடைபெற்றது.  மாநில இளைஞர் சங்க தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார்.
 
விழாவில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது,

              "எதிர்காலமே இளைஞர்கள் கையில்தான் உள்ளது. இளைஞர் சக்தியை கொண்டு தமிழ்நாட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்தவேண்டும். வருங்காலத்தில் நம்கட்சியை இளைஞர்கள்தான் வழிநடத்தப் போகிறீர்கள். இளைஞர்களை நம்பிதான் நானும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ம.கவும் உள்ளது.

                   வன்னியர் சங்கத்திற்கு எப்படி தனித்துவம் உள்ளதோ, அதே போன்று இளைஞர் சங்கத்திற்கு தனித்துவம் உண்டாக்கப்படும். மேலும் இந்த இளைஞர் சங்கத்தை பதிவு செய்யப்போகிறேன். குறிப்பாக இளைஞர் சங்கத் திடம் எதிர்பார்ப்பது ஒழுக்கம், கட்டுப்பாடு, உண்மையான உழைப்பு ஆகிய மூன்றை மட்டுமே.  இந்த மூன்றையும் செய்தால் பதவி உங்களை தானாக தேடிவரும். இளைஞர் சங்கத்திற்கு தனியாக ஒதுக்கீடு கொடுங்கள் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசிடம் நான் கேட்டேன். அவரும் தருவதாக கூறிவிட்டார்.

                    நாம் 10 கட்டளைகளை முதலில் கடைப்பிடிக்க வேண்டும். அந்த கட்டளைகள் படி நடப்பேன் என சத்தியம் செய்யவேண்டும். 

எல்லோருக்கும் தரமான ஒரே சீரான கட்டணமில்லாத சமச்சீர் கல்வி, 
சமூக நீதி, 
தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு, 
படிப்பகங்களை உருவாக்குதல்,
வன்முறை, 
தீவிரவாதம், 
ஆபாசம், 
பெண் அடிமை அகற்ற விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும், 
கல்வியில் நீதி, 
சமூக நீதி, 
வரதட்சணை கொடுமை, 
மது, பான்பராக் போன்ற போதை பொருட்களை அகற்றுவது 

                போன்ற 10 கட்டளைகளை நாம் கடைப் பிடிக்க வேண்டும்.

                  இளைஞர் சங்கத்தினர் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படும். முதலில் நாம் கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும். சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும். பசுமையான சூழ்நிலை உருவாக மரம் நடவேண்டும். வித்தியாசமான புதுமையான அரசியலை உருவாக்க போகிறோம்.

               2011-ம் ஆண்டு இளைஞர் சங்கத்தின் ஆண்டு. இளைஞர் சக்தி முழுமையான சக்தியாகும். வேகமான செயலாக்கம் மட்டுமே எனக்கு தேவை. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 1000 இளைஞர்கள் 300 இளம் பெண்கள் உள்பட மொத்தம் 1300 பேரை தேர்வு செய்ய வேண்டும். ஒரு கிராமத்தில் 3 இளைஞர்கள், ஒரு இளம்பெண் இருந்தால் அந்த 1300 பேரில் 100 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விஞ்ஞான ரீதியில் பயிற்சி அளித்து அரசியல் செய்யப்போகிறோம்’’என்று பேசினார்.,

 

2016-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தனித்தே போட்டியிடும் ; பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

திருக்கோவிலூர்:
 
            திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொகுதியில் உள்ள அனைத்து கிளை செயலாளர்கள், தலைவர்கள் மற்றும் பொருளாளர்களுக்கான பயிற்சி முகாம் திருக்கோவிலூரில் நடைபெற்றது.
 

முகாமில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியது :

              ‘’தமிழகத்தில் மற்ற ஜாதிக்காரர்கள் முதலமைச்சராக இருந்து விட்டனர். ஆனால்  வன்னியர் இன்னமும் முதலமைச்சராக ஆக முடியவில்லை. காரணம் இந்த சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞனும், இளம்பெண்ணும் பா.ம.க. வில் இணைந்து மாம்பழத்துக்கு ஓட்டுபோடும் நிலைவரும்போது நாம் சுலபமாக ஆளும் வாய்ப்பை பெற முடியும். நம்மைபார்த்து அடிக்கடி கூட்டணி மாறுவதாக பேசுகின்றனர். நான் கேட்கிறேன் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுமே மாறி, மாறி கூட்டணி அமைத்து தான் தேர்தலை சந்திக்கின்றன.

           ஆனால் நம்மை பார்த்து மட்டும் இந்த கேள்வியை கேட்கின்றனர். தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை இதுவரை தனித்து தான் போட்டியிட்டு ஆட்சியை பிடித்ததா?  இனிவரும் காலங்களில் நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியும் தனித்து போட்டியிட வேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும் என்ற நிலை வந்தால் அந்த தீர்மானத்தில் கையெழுத்திடும் முதல் கட்சி பா.ம.க. வாகத்தான் இருக்கும்.

           தேர்தலில் தனித்து போட்டியிடுவது பா.ம.க.வுக்கு பெரியவிஷயம் அல்ல. காரணம் 89, 91, 96 ஆகிய சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு சொற்ப அளவில் வெற்றிபெற்றதையும் நினைவில் கொள்ள வேண்டும். வருகின்ற தேர்தலில் கூட்டணி பற்றி ஜனவரி மாதத்தில் தெரியும். 2016-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தனித்தே போட்டியிடும். அவ்வாறு போட்டியிட்டு அன்புமணி ராமதாஸ் தலைமையில் தமிழகத்தில் பாட்டாளி ஆட்சி அமையும்.

                 கூட்டணி இல்லாமல் இந்தியாவில் யாரும் தேர்தலை சந்திக்கவில்லை. இது கூட்டணி யுகம். அனைவரும் மாறி, மாறி கூட்டணி வைக்கின்றனர். அதுபோலத்தான் பா.ம.க.வும் மாறி, மாறி கூட்டணி வைக்கின்றது’’என்று  பேசினார்.

திருவள்ளூர் சட்டசபை தொகுதி பா.ம.க. பயிற்சி முகாம்: ராமதாஸ் கலந்து கொள்கிறார்

           திருவள்ளூர் சட்டசபை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் கிளை தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்களுக்கு பயிற்சி முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மணவாளநகரில் உள்ள கே.இ.ஜெயலட்சுமி திருமண மண்டபத்தில் நடக்கிறது. 



           இந்த பயிற்சி முகாமில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கிறார். இதில் முன்னாள் அமைச்சர் வேலு, கோ.க.மணி எம்.எல்.ஏ., மாநில துணை பொது செயலாளர் சிவ.கோவிந்தராசு உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பாலா என்ற பாலயோகி செய்து வருகிறார்.

அரசியலில் திரைப்படத்துறையினரின் ஆதிக்கம் மாற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

விழுப்புரம்:

          விழுப்புரம் அருகே உள்ள நாட்டார் மங்களத்தில் பாமகவைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

               அரசு மது விற்பனையை பற்றியே கவலைப்படுகிறது. தமிழகத்தில் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 63 வருட சுதந்திரத்தில் தமிழகம் எப்படி இருக்க வேண்டும். வறுமையை ஒழித்திருக்க வேண்டும். ஆனால் பணக்காரன் மேலும் பணக்காரணாக ஆகிறான். ஏழை மேலும் ஏழையாகிறான் என்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், 

                 காசு கொடுத்தால் டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள். நானும், மருத்துவர் ராமதாசும் படித்து டாக்டர் பட்டம் வாங்கினோம். தமிழகத்தில் பட்டங்கள் மற்றும் விருதுகள் பணம் கொடுத்து வாங்கப்படும் நிலை மாற்றப்பட வேண்டும். தமிழக அரசியலில் திரைப்படத்துறையினர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலை மாறவேண்டும் என்றார்

திமுக, அதிமுக, தேமுதிக வளர்ச்சி முடிவுக்கு வந்து விட்டது-அன்புமணி

சேலம்: 

             பாமகவில் தான் தினந்தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் இணைந்து வருகின்றனர். ஆனால், திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய பிற கட்சிகளின் வளர்ச்சி முடிவுக்கு வந்து விட்டது என்று பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி கூறினார்.

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட பாமக இளைஞர்கள் சங்க நிர்வாகிகள் பயிற்சிக் கூட்டத்தில்
பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி பேசுகையி்ல், 
             இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சி பாமக தான். இதில் தினந்தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் இணைகின்றனர். ஆனால், திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய பிற கட்சிகளின் வளர்ச்சி முடிவுக்கு வந்து விட்டது. பாமக இளைஞர் சங்கத்தினர் தங்கள் பகுதியின் சிறிய பிரச்சனைக்குக் கூட போராட்டம் நடத்த வேண்டும்.

               இளைஞர் சங்கத்தில் கட்டுப்பாட்டுடனும், நேர்மையுடனும், விசுவாசத்துடனும் உழைக்கும் இளைஞர்களுக்கு கட்சியில் மட்டுமின்றி பல்வேறு பதவிகள் காத்திருக்கின்றன. இதற்காக தலைவர் ராமதாஸிடம் சண்டை போட்டு உங்களுக்கு பதவிகளை வாங்கித் தருவேன். எதிர்காலத்தில் கட்சியை வளர்க்கும் உங்களுக்கு எம்எல்ஏ, எம்.பி, அமைச்சர் பதவிகள் காத்திருக்கிறது. உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அன்புமணியே நேரில் வருவான்.

            பாமக இளைஞர்களுக்கென விரைவில் மாத இதழ் ஒன்று வெளியிடப்படும். இனிமேல் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. பெருகி விட்ட தகவல் தொழில்நுட்பம் காரணமாக அவர்கள் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கின்றனர் என்றார்.

பாமக 50 தொகுதிகளில் ஜெயித்தே தீர வேண்டும்: ராமதாஸ்

வந்தவாசி: 

            கூட்டணியில் இருந்தாலும் சரி, தனியாக நின்றாலும் சரி வரும் தேர்தலில் பாமக எப்படியாவது 50 தொகுதியில் ஜெயித்தாக வேண்டும், என்றார் பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ்.
 

தொகுதி பா.ம.க. இளைஞர்- இளம் பெண்கள் பயிற்சி முகாம் மருதாட்டி என்ற இடத்தில் நடந்தது. இதில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதது:
 
             வந்தவாசி தொகுதி பா.ம.க.வின் கோட்டை. வரும் சட்டசபை தேர்தலில் பா.ம.க. தனியாக நிற்கலாம். கூட்டணி அமைத்தும் போட்டியிடலாம். 50 தொகுதிகளில் நாம் போட்டியிட்டால் அனைத்திலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும். கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால், கூட்டணி கட்சியை உயிரைக் கொடுத் தாவது வெற்றி பெறச்செய்ய வேண்டும். இதற்கு பா.ம.க. இளைஞர்கள் சிறப்பாக பாடுபட வேண்டும்.

                   கடந்த 63 ஆண்டுகளில் எத்தனையோ பேர் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு முறை கூட வன்னியர் முதல்வர் ஆகவில்லை. தமிழ்நாட்டில் 6.5 கோடி மக்கள் உள்ளனர். 500 சாதிகள் இருக்கின்றன. இதில் வன்னியர்கள் 2.5 கோடி. எனவே வன்னியர் சமூகம் அரசியலில் முதல்வர் பதவியைப் பிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் நடிகர்கள் இன்னும் எத்தனை கட்சிகளை தொடங்குவார்கள் என்று தெரியவில்லை. இதற்கு இளைஞர்கள் பலியாகக் கூடாது. ரசிகர் மன்றம் வைக்கக் கூடாது. மதுக் கடைகளுக்கும் செல்லக்கூடாது. இளைஞர்கள் இருக்க வேண்டிய கட்சி பா.ம.க.

               தமிழ்நாடு சாராய உற்பத்தியிலும், திரைப்பட தயாரிப்பிலும்தான் வளர்ச்சி பெற்றுள்ளது. கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். அதற்கு பா.ம.க. வெற்றி பெற வேண்டும். இளைஞர் கள் பா.ம.க.வில் அதிக அளவில் சேரவேண்டும். மற்ற கட்சியில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்களையும் பா.ம.க.வில் சேர்க்கவேண்டும். வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும்.", என்றார்.

அமெரிக்காவைப்போல் இந்தியாவிலும் 108 ஆம்புலன்சை அறிமுகப்படுத்தியது நான்: டாக்டர் அன்புமணி பேச்சு


செந்துறை:
                    அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா அலுவலகம் பின்புறம் பா.ம.க. இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வந்தவர்களை மாவட்ட செயலாளர் வைத்தி வரவேற்றார்.

                முகாமில் பா.ம.க. நிறு வனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி , பா.ம.க. தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு, சமூகநீதிப் பேரவை மாநில செயலாளர் பாலு, மாநில துணை செயலா ளர் பாலு ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்டு இளை ஞர்களுக்கு பயிற்சி அளித்து சிறப்புரை ஆற்றினார்கள்.
 இதில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி பேசியது:-             இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வரதட்சணை வாங்கக் கூடாது. மது அருந்தக்கூடாது. புகையிலையை பயன்படுத்தக் கூடாது என்று உறுதி ஏற்க வேண்டும். தமிழ்நாட்டில் 21/2 கோடி வன்னியர்கள் உள்ளனர். அவற்றில் 1 கோடி வன்னிய வாக்காளர்கள் உள்ளனர்.

              இவர்கள் மட்டும் பா.ம.க.விற்கு வாக்களித்தால் 100 தொகுதிகளில் நாம் வெற்றி பெற முடியும். நமது பலத்தை பென்னாகரம் தொகுதி பார்முலா மூலம் நிருபித்துள் ளோம். இதனை வரும் சட்ட மன்ற தேர்தலிலும் நிரூபிக்க வேண்டும். அதற்கு நீங்கள் முன்பு வன்னியர் சங்க காலத் தில் இருந்து நமக்காக பாடு பட்ட நமது முன்னோர்களை சந்தித்து அவர்களின் ஒத் துழைப்பை பெற வேண்டும். மாற்றுக் கட்சிக்கு சென்ற நமது தம்பிமார்களிடம் பேசி நமது கட்சிக்கு கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.
                 பா.ம.க. மட்டுமே வன்னியர்களின் உரிமைக்காக போராடும் கட்சி. வேறு எந்த கட்சி எம்.எல்.ஏ.வும் சட்ட மன்றத்தில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பேச முடியாது. வன்னி யர்கள் ஆட்சிக்கு வந்தால்தான் நாம் வாழ முடியும். நான் மத்திய மந்திரியாக இருந்த போது உலக அரங்கில் சிறந்த அமைச்சராக பாராட்டப்பட்டு 3 விருதுகளை பெற்றேன். ஐ.நா.சபை தலைவர் எனது அலுவலகத்திற்கு வந்து என்னை சந்தித்து பாராட்டி சென்றார். இது உலக அளவில் ஒரு தமிழனுக்கும், வன்னிய ருக்கும் கிடைத்த பெருமையாகும்.                 நான் அமெரிக்கா சென்ற போது அங்கு 113 என்ற எண்ணை அழைத்தால் 2 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்து நிற்கும். இதனை கண்ட நான் இதேபோன்ற வசதியை நம் இந்திய மக்களும் பெற வேண் டும் என்பதற்காக உடனடியாக 950 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி 3 மாத காலம் திட்ட மிட்டு இந்தியாவில் 14 மாநி லங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவையை துவங்கினேன். 80 சதவீதம் சிகிச்சை ஆம்புலன் சிலேயே செய்ய வசதி ஏற்படுத்தி கொடுத்தேன். டாக்டர் ராமதாஸ் ஆணைக்கிற்கேற்ப நமது ஜனாதிபதிக்கு கிடைக்கும் மருத்துவ வசதி கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து அரசு மருத்துவ மனைகளுக்கும் நவீன வசதி களை ஏற்படுத்திக் கொடுத் தேன்.                தமிழகத்தில் பா.ம.க. தயவில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. டாக்டர் ராமதாஸ் யாரை கைகாட்டு கிறோரோ அவரே முதல்வராக முடியும். அதற்கு தம்பி, தங்கைமார்களான நீங்கள் புரட்சியை ஏற்படுத்த இந்த பயிற்சி முகாமில் உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு டாக்டர் அன்புமணி பேசினார்.                விழாவில் அரியலூர் மாவட்ட செயலாளர் வைத்தி அன்புமணிக்கு வெள்ளி கிரீடம் அணிவித்தார். மாநில துணைத் தலைவர் உலக.சாமிதுரை பயிற்சியில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு 1000 பனியன்களும், வன்னியர் கல்வி கோவிலுக்கு ரூ.10 ஆயிரம் நிதியும் வழங்கினார். மாநில தொழிற்சங்க துணைத் தலைவர் சோழன்குடிக்காடு குமார் வீரவாள் பரிசளித்தார். இம்முகாமில் ஒன்றிய, நகர, இளைஞரணி, இளம்பெண்கள் அணி, கிளை நிர்வாகிகள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

பாமக ஆதரவு இல்லாமல் எவரும் ஆட்சி அமைக்க முடியாது: அன்புமணி ராமதாஸ்

சோழிங்கர்: 

              சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க தமிழகத்தை ஆளும் கட்சி, இதுவரை ஆண்ட கட்சி, தேசிய கட்சி என பல கட்சிகளும் பாமகவுக்கு அழைப்பு விடுத்து கொண்டிருக்கின்றன என்று கட்சியின் இளைஞரணித் தலைவரான அன்புமணி கூறினார்.
 
பாமக இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாமில் அன்புமணி ராமதாஸ் அவர், 

                உலகின் பல்வேறு நாடுகளிலும் 5 கோடி வன்னியர்கள் உள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறிய கிராமத்தில் பிறந்தார். வேளாண் தொழில் செய்து கிடைத்த வருமானத்தில் படித்தார். டாக்டருக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தும் கூட உறவினர்கள் உதவியுடன்தான் படிக்க முடிந்தது . படித்து முடித்ததும் அமெரிக்காவுக்கு வேலைக்கு அழைத்தனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். எனது சமுதாயத்துக்காக பாடுபடப் போகிறேன் என்று கூறிவிட்டார்.

              இந்தியா விடுதலை அடைந்து 64 ஆண்டுகள் ஆகிவிட்டன. யார் யாரோ ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் யாரும் நம்மை வாழ விடவில்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கட்சி பாமக மட்டும் தான். மற்ற கட்சிகள் அனைத்தும் தேய்ந்து வருகின்றன. மற்ற கட்சிகளில் உள்ள வன்னியர்களையும் பாமகவுக்கு அழைத்து வர வேண்டும்.

               சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்று கவலைப்படாதீர்கள். தமிழகத்தை ஆளும் கட்சி, இதுவரை ஆண்ட கட்சி, தேசிய கட்சி என பல கட்சிகளும் நமக்கு அழைப்பு விடுத்து கொண்டிருக்கின்றன. பாமக ஆதரவு இல்லாமல் எவரும் ஆட்சி அமைக்க முடியாது. டாக்டர் ராமதாஸ் யாரை கைகாட்டுகிறாரோ அவர்தான் முதல்வர் ஆக முடியும் என்றார் ராமதாஸ்.

பாமக யாருடன் கூட்டணி? ஜனவரியில் அறிவிப்பு

பெரம்பலூர்:

             வரும் சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து ஜனவரி மாதம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார் என்று  கட்சியின் மாநிலத் தலைவர் கோ.க.மணி தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவை தொகுதியில் இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கான தேர்தல் பணிக் குழுப் பயிற்சிக் கூட்டம் குன்னத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் கோ.க. மணி அளித்த பேட்டி:

                 தமிழகத்தில் அதிக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களையும் வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.

              மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி, பாதிப்பின் அளவை கணக்கீடு செய்து, மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியை கூடுதலாகப் பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

              வரும் சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஜனவரி மாதத்தில் அறிவிப்பார் என்றார் அவர்.

கல்வி முறையில் மாற்றம்: ராமதாஸ் கோரிக்கை

 பெரம்பலூர்:

                ல்வி முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பாமகவைச் சேர்ந்த இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கான பயிற்சி முகாம் செந்துறையில் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

                     கல்வி, விவசாயம் போன்றவற்றில் மாற்றம் கொண்டுவர வேண்டும். ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு ஏக்கருக்கு 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும். பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற பாமக ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.

பின்னர் பேசிய பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், 

                  பிற்படுத்தப்பட்டோருக்கு ராமதாஸ் இடஒதுக்கீடு பெற்றுத் தந்ததால்தான் சாதாரண மக்களும் உயர்கல்வி பயில முடிந்தது. மதுவை ஒழிக்க இளைஞர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் மது விற்பனை ஆண்டுக்கு ஆயிரத்து நானூறு கோடி ரூபாய். ஆனால் இப்போது 15 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் மதுக்கடைகளை ஒழிக்கும் போராட்டம் நடைபெறும் என்றார். 

கொள்கை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் நடிகர்கள்!-அன்புமணி

சேலம்:

                டிகர்களுக்கு கொள்கை என்றால் என்னவென்று தெரியாது, எதற்கு கட்சி தொடங்குகிறோம் என்றும் தெரியாது, என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

            சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி பாமக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் ப நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பயிற்சி முகாமில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேசுகையில், 

               "தமிழகத்தை எந்த கொள்கையும் இல்லாத திரைத் துறையைச் சேர்ந்தவர்களே ஆட்சி செய்து வருகின்றனர். 43 வருடமாக சினிமாக்காரர்கள்தான் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். நாட்டை ஆள சினிமாதான் தகுதியா... சினிமாவை வைத்துதான் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

              இன்று வந்த நடிகர்கள் எல்லாம் நான்தான் முதல்வர் என்று கூறிக்கொள்கிறார்கள். அந்த நடிகர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள் இவர்கள்? மக்களுக்காக போராடினார்களா... சிறைக்கு சென்றார்களா.... ஒரு கிராமத்தையாவது எட்டி பார்த்திருப்பார்களா...?

                நடிகர்களுக்கு கொள்கை என்றால் என்னவென்று தெரியாது. எதற்கு கட்சி தொடங்கினார்கள் என்றும் தெரியாது. ஆனால் கொள்கைக்காக துவங்கப்பட்ட கட்சி பாமகதான். தமிழகத்தில் சீரான இலவச கல்வி வழங்க பாமக தொடர்ந்து பாடுபடும்," என்றார். சிறிது காலம் நடிகர்கள் மீதான தாக்குதலை நிறுத்தி வைத்திருந்த பாமக நிறுவனர் ராமதாஸும், அவர் மகன் அன்புமணியும் மீண்டும் தீவிரமாக நடிகர்களைத் தாக்கிப் பேச ஆரம்பித்துள்ளனர்.

               அதிமுகவுடன் விஜயகாந்தின் தேமுதிக கூட்டணி உறுதி என்று செய்திகள் வெளியாகும் நிலையில், பாமகவின் இந்த தாக்குதல் பேச்சு கவனிக்கத்தக்கது. பயிற்சி முகாமில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், பெண் சிசு கொலைகளுக்கு வரதட்சணை கொடுமையே முக்கிய காரணம். வரதட்சணை கொடுமையையும், குடிப் பழக்கத்தையும் அறவே ஒழிக்க இளைஞர்கள் பாடுபட வேண்டும். நல்ல சமுதாயம் உருவாக வேண்டும்.

               பெண்ணை கட்டிக் கொடுக்கும்போது, பெண்ணுக்கு நகை போடுவீர்காள? வேறு என்ன செய்வீர்கள் என்று கேட்கக் கூடாது. இதுபோன்ற பண்பாடுகள் ஒழிய வேண்டும். இதுபோன்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். தமிழகத்தில் குடி பழக்கத்தினால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில், அதனை அரசே ஊக்குவித்து வருகிறது. இது எங்களுக்கு கவலை அளிக்கிறது என்றார்.

நடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!

விழுப்புரம்:

            நடிகர்கள் கோட்டைக்குச் சென்றே தீருவேன் என்று கூறி வரிசையில் நிற்கிறார்கள் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாஸ் கூறியுள்ளார்.
 
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பாமக இளைஞர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ், 

              கிராமங்களில் மதுக்கடைகளை அறவே ஒழிக்க வேண்டும் என்று கூறினார். நாடு விடுதலை அடைந்து 63 ஆண்டுகள் கடந்த பின்னரும் அனைவருக்கும் உணவு கிடைக்கவில்லை. இளைஞர்கள் மது மற்றும் திரைப்பட மாயையில் சிக்கித் தவிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

               இப்போது நிறையபேர் நடிக்க வந்துவிட்டார்கள். கோட்டைக்குச் சென்றே தீருவேன் என்று வரிசையில் நிற்கிறார்கள். எங்கு பார்த்தாலும் நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. இந்த முகங்களைப் பார்த்துவிட்டு இளைய சமுதாயம் ஓடுகிறது. நடிகர்கள் பின்னால் ஓடுவதை இளைஞர்கள் நிறுத்தும்போதுதான் நாடு முன்னேறும் என்றும் மருத்துவர் ராமதாஸ் பேசினார்.
 
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ், 

            சட்டமன்றத் தேர்தலின் போது எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது கூறித்து பாமக நிறுவனர் உரிய நேரத்தில் முடிவை எடுப்பார் என்று கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம்: ராமதாஸ்

மேட்டூர்:

           பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் முதல் நடவடிக்கையாக மதுவை ஒழிப்போம் என்று கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.

             மேட்டூர் அருகே உள்ள ஜலகண்டபுரத்தில் பாமக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் கூறியது: 

              வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவோம் என்று அரசியல் கட்சிகள் சிந்தித்து வருகின்றன. ஆனால் ஆனால் பாமக ஒரு சமுதாயம் எப்படி இருக்கவேண்டும் என்று சிந்திக்கிறது.மதுவால் வீட்டுக்கும் நாட்டுக்கும் உயிருக்கும் கேடு விளைகிறது. ஆதலால் சமுதாயம் அழிகிறது. அதனால்தான் குடிக்கக்கூடாது என்று கூறிவருகிறோம். நல்ல குடிமகனை உருவாக்குவதில் அரசுக்கும் பங்கு உண்டு.பாமக ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்கள் மூன்று வேளையும் வயிறு நிறைய சாப்பிடும் நிலை ஏற்படும். செல்வந்தரின் குழந்தைகளுக்கு கிடைக்கும் தரமான கல்வி ஏழைகளுக்கும் கிட்டும்.  

               பாமக.வின் இட ஒதுக்கீட்டு போராட்டத்துக்கு பிறகுதான் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்டத் துறைகளில் அதிக இடம் கிடைத்து வருகிறது என்றார்.பின்னர் எடப்பாடியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் அவர் பேசியதாவது:தமிழகத்தில் 1996-ம் ஆண்டு பாமக தனித்து போட்டியிட்டு எடப்பாடி, ஆண்டிமடம், தாரமங்கலம், பென்னாகரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. தமிழகத்தில் உள்ள வன்னியர்கள் மட்டும் பாமகவுக்கு வாக்கு அளித்தாலே 120 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறமுடியும். 

                    வன்னியர் சமுதாயத்தினர் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே கடைக்கோடி மக்களும் வாழ்க்கையில் முன்னேற முடியும். இரண்டு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி கூட காரில் செல்லும் அளவுக்கு விவசாய கொள்கை என ஏராளமான திட்டங்கள் பாமகவிடம் உள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் சட்டங்களாக மாற பாமக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே முடியும் என்றார்.இந்த பயிற்சி முகாம்களில் முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.தமிழரசு, வை.காவேரி, ப.கண்ணன், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர் ராமர் உள்ளிட்டோர் பேசினர்.

பெண் சிசு கொலைக்கு வரதட்சணை கொடுமையே காரணம்: ராமதாஸ்

எடப்பாடி:

            பெண் சிசு கொலைகளுக்கு வரதட்சணை கொடுமையே முக்கிய காரணம் என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

            சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி பாமக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பயிற்சி முகாமில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

               பெண் சிசு கொலைகளுக்கு வரதட்சணை கொடுமையே முக்கிய காரணம். வரதட்சணை கொடுமையையும், குடி பழக்கத்தையும் அறவே ஒழிக்க இளைஞர்கள் பாடுபட வேண்டும். நல்ல சமுதாயம் உருவாக வேண்டும்.  பெண்ணை கட்டிக் கொடுக்கும்போது, பெண்ணுக்கு நகை போடுவீர்காள? வேறு என்ன செய்வீர்கள் என்று கேட்கக் கூடாது. இதுபோன்ற பண்பாடுகள் ஒழிய வேண்டும். அதே சமயத்தில் ஆண் பிள்ளையை பெற்றவர்கள், பெண்ணுக்கு எதுவும் செய்ய வேண்டாம். பெண்ணை மட்டும் கொடுத்தால் போதும் என்ற சமுதாயம் வளர வேண்டும். இதுபோன்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம்.

                 தமிழகத்தில் குடி பழக்கத்தினால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில், அதனை அரசே ஊக்குவித்து வருகிறது. இது எங்களுக்கு கவலை அளிக்கிறது என்றார்.

127 தொகுதிகளில் வென்றால் ஆட்சி: டாக்டர் ராமதாஸ்

விழுப்புரம்:
 
               வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் இணைந்து வாக்களித்தால் 127 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கலாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். பாமக விக்கிரவாண்டி தொகுதி இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாம் கெடாரில் சனிக்கிழமை நடைபெற்றது.
 
இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது: 
 
                  வன்னியர் அனைவரும் ஒருங்கிணைந்து வாக்களித்தால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் தனித்தே ஜெயிக்கலாம். தமிழகத்தில் 100 தொகுதிகளில் ஜெயிக்கலாம். ஆட்சியை பிடிக்க கூடுதலாக 17 பேர் தேவை.இந்நிலையில் வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் இணைந்து வாக்களித்தால் 127 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கலாம்.
 
                 உத்தரப்பிரதேசத்தில் 20 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்கள் ஒருங்கிணைந்து வாக்களித்து 5-வது முறையாக மாயாவதி முதல்வராக உள்ளார். அந்த மக்கள் அப்படியே ஓட்டு போட்டார்கள். ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி கொடுத்தாலும் அவர்கள் மாற்றிப் போடமாட்டார்கள்.அதுபோல நீங்களும் வாக்களித்தால்தான் ஆட்சியை பிடிக்க முடியும். நீங்கள்தான் என்னை போயஸ் தோட்டத்துக்கும், கோபாலபுரத்துக்கும் அனுப்புகிறீர்கள். நீங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் இந்த நிலை ஏன் எனக்கு ஏற்படப்போகிறது?
 
                  பாமக ஆட்சிக்கு வந்தால் 3 வேளை உணவு, உடைக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். வீடு இல்லையென்று பட்டா கேட்டு மனு தரும் நிலை இருக்காது. கழிப்பறை இல்லாத வீடுகள் இருக்காது. அனைவரும் கல்வியறிவு பெறவேண்டும், குடும்பம் தவறாமல் அரசு வேலைக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். சாராயம் இல்லாத மாநிலமாக உருவாக்குவோம், ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் செய்வோம். அப்போது அனைத்து மக்களுமே நம்மை ஆதரிப்பார்கள் என்றார்.
 
                   கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் கோ.க. மணி ஆகியோர் பேசினர். எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், மாநில துணைத் தலைவர் தங்கஜோதி, மாநில செயற்குழு உறுப்பினர் சு.நடராஜன், காணை ஒன்றியச் செயலர் சு.துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இரண்டரை கோடி வன்னியர் இருந்தும் என் பேச்சை கேக்கலையே! - ராமதாஸ்

விழுப்புரம்: 

            தமிழகத்தில் வன்னியர்கள் இரண்டரை கோடி பேர் இருந்தும் என் பேச்சை யாரும் கேட்காததால் பா.ம.க. ஆட்சிக்கு வர முடியவில்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

                 விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி கெடார் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இளைஞர்கள், இளம் பெண்கள் பயிற்சி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். 



கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், 


                    "விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஒண்ணேகால் லட்சம் பேர் வன்னிய சமூத்தினர். இதில் 60 ஆயிரம் பேர் நம்முடைய வேட்பாளருக்கு வாக்களித்தாலே போதும். நாம்தான் ஜெயிப்போம். மாவட்டம் முழுவதிலும் உள்ள 11 தொகுதிகளிலும் வன்னியர்கள் மாம்பழத்திற்கு ஓட்டுப் போட்டார்களேயானால் 11 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம்.

படுத்துக் கொண்டே ஜெயிக்கலாம்!

                       அதேபோல் தமிழகம் முழுவதும் வன்னியர்கள் பா.ம.க.விற்கு வாக்களித்தால் 100 தொகுதியில் கண்டிப்பாக நாம் வெற்றி பெற்றுவிடுவோம். ஆட்சி அமைக்க 17 தொகுதிதான் தேவை. அப்போது யாராவது தானாகவே முன்வந்து ஆதரவு கொடுப்பார்கள். தாழ்த்தப்பட்டவர்களும், வன்னியர்களும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்தால் 127 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெற்றி பெறலாம்.

என் பேச்சை கேட்கவில்லையே...

                         உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தலித் இனத்தின் மாயாவதி 5-வது முறையாக முதல்வராக பணியாற்றி வருகின்றார். அங்கு 20 முதல் 27 சதவீதம்தான் தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளனர். இங்கு நாம் 2 1/2 கோடி பேர் வன்னியர்கள் இருந்தும் நாம் ஆட்சி செய்ய முடியவில்லை. காரணம் எனது பேச்சை யாரும் கேட்பதில்லை. பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைகள் முன்னேறுவதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி உள்ளோம்.

                    நீங்கள் பா.ம.க.விற்கு வாக்களித்தால் நான் ஏன் ஜெயலலிதாவின் தோட்டத்திற்கும், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கும் செல்கின்றேன். பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்கான சட்ட திருத்தத்தில் முதல் கையெழுத்தையிடுவோம். ஒரு தடவை பா.ம.க.விற்கு வாய்ப்பு கொடுத்தால் பின்னர் ஆட்சியை பார்த்து தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியை இருக்க செய்வீர்கள். பா.ம.க. ஆட்சி வருவது இளைஞர்கள், இளம்பெண்களான உங்கள் கையில்தான் உள்ளது..." என்றார்.