அதிக கட்​ட​ணம்: கல்வி நிலை​யங்​க​ளின் ​அங்​கீ​கா​ரத்தை ரத்து செய்ய வேண்​டும்​​​- ஜி.கே.​ மணி

நிர்​ண​யித்த கல்வி கட்​ட​ணங்​களை விட கூடு​த​லாக வசூ​லிக்​கும் பள்​ளி​க​ளின் மீது ​சட்​டப்​படி நட​வ​டிக்கை எடுக்​கக்​கோரி சென்னை மெமோ​ரி​யல் ஹால் முன்​
             
                   கூடு​தல் கல்​விக் கட்​ட​ணம் வசூ​லிக்​கும் பள்​ளி​கள் மற்​றும் கல்லூரிகளின் அங்​கீ​கா​ரத்தை ரத்து செய்ய வேண்​டும் என்று பாமக தலை​வர் ஜி.கே.​ மணி வலி​யு​றுத்​தி​னார்.​

 பள்​ளிக்​கூ​டங்​க​ளில் அதிக கட்​ட​ணம் வசூ​லிப்​ப​தைக் கண்​டித்து பாமக சார்பில் வியாழக்கிழமை நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​துக்கு தலைமை வகித்து அவர் பேசியது:​

                    பள்​ளி​க​ளின் கட்​டண விகி​தத்தை நீதி​பதி கோவிந்​த​ரா​ஜன் குழு ஏற்கெனவே நிர்​ண​யித்​துள்​ளது.​ ஆனால்,​​ அரசு உத்​த​ர​வு​க​ளை​யும்,​​ நீதி​பதி கோவிந்​த​ரா​ஜன் குழு நிர்​ண​யித்த கட்​ட​ணத்​தை​யும் தமி​ழ​கத்​தில் உள்ள 11 ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்ட பள்​ளிக்​கூ​டங்​கள் புறக்​க​ணித்து வரு​கின்​றன.​ ​ பல மடங்கு கூடு​த​லாக பெற்​றோர்​க​ளி​டம் பணம் வசூ​லித்து வரு​கின்​றன.​ இது,​​ தொடர்​ந​தால்,​​ மத்​திய,​​ மாநில அர​சு​கள் கொண்டு வந்த கல்வி சட்​டத்​தை​யும்,​​ அடிப்​படை உரிமை சட்​டத்​தை​யும் அடி​யோடு பாதிக்​கும் நிலை ஏற்​ப​டும்.​ ஆ​னால்,​​ அரசு சார்​பாக இந்​தப் பள்​ளிக் கூடங்​கள் மீது இது​வரை எந்த நட​வ​டிக்​கை​யும் எடுக்​கப்​ப​ட​வில்லை.​ ஒரு சில பள்​ளிக்​கூ​டங்​கள் மீது வந்​துள்ள புகா​ரை​ய​டுத்து,​​ இது​கு​றித்து விளக்​கம் கேட்டு கடி​தம் அனுப்​பப்​பட்​டுள்​ள​தாக கூறப்​ப​டு​கி​றது.​ ஆனால்,​​ இது ஏற்​பு​டை​யது அல்ல.​ அ​திக கட்​ட​ணம் வசூ​லிக்​கும் பள்ளிக்கூடங்கள் மீது பெற்​றோர்,​​ மாண​வர்​க​ளி​டம் புகார் பெறா​ம​லேயே அரசே கண்​ட​றிந்து நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.​ பள்ளி​கள் மட்​டு​மன்றி தனி​யார் பொறி​யி​யல்,​​ மருத்​து​வம் மற்​றும் ஆசி​ரி​யர் பயிற்சி கல்​லூ​ரி​கள் உள்​ளிட்ட அனைத்​துக் கல்​லூ​ரி​க​ளி​லும் கூடு​தல் கட்​ட​ணம் வசூ​லிக்​கப்​ப​டு​கி​றது.​ இ தைத் தடுக்க மாவட்ட அள​வில் கல்​வித் துறை அதி​கா​ரி​கள்,​​ பத்​தி​ரி​கை​யா​ளர்​கள் இடம் பெற்​றுள்ள குழுக்​களை அமைத்து,​​ அதிக கட்​ட​ணம் வசூ​லிக்​கும் பள்​ளி​கள் மீது சட்ட ரீதி​யாக கடும் நட​வ​டிக்கை எடுக்​க​லாம்.​ ஏற்​கெ​னவே வசூ​லித்த கூடு​தல் கட்​ட​ணத்தை பெற்​றோர்​க​ளுக்கு திருப்பி வழங்க வேண்​டும் என்றார்.​

0 கருத்துகள்: