கே.பி.கே.அருள்முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கே.பி.கே.அருள்முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதுச்சேரி பா.ம.க. சார்பில் பசுமை தாயகம் ஆண்டு விழா

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/ff8f411d-ba0f-4e92-9183-44148e2a0a12_S_secvpf.gif

 
புதுச்சேரி:
 
          புதுவை பா.ம.க. சார்பில் பசுமை தாயகம் ஆண்டு விழா திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பசுமை தாயகம் மற்றும் பா.ம.க. சார்பில் எல்லைப்பிள்ளை சாவடியில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று பிறந்த 25 குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

            இதைத்தொடர்ந்து பா.ம.க.வினர் அங்கிருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிளில்களில் ஊர்வலமாக புறப்பட்டு வில்லியனூர் விவேகானந்தா அரசு மேல்நிலைப்பள்ளியை அடைந்தனர். அங்கு சுற்று சூழலை வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. 
 
              இந்த நிகழ்ச்சிகளுக்கு பா.ம.க. மாநில செயலாளர் அனந்தராமன் தலைமை தாங்கினார். பா.ம.க. ஆலோசகர் ராமகிருஷ்ண கவுண்டர், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் மதியழகன், முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர்கள் பொன்.செல்வராஜ், ஜெயபாலன், ரவி, வி.பி.பி.வேலு, வடிவேலு, வெங்கடேசன், பெருமாள், முகமது யூனூஸ், கிருஷ்ணமூர்த்தி, தேவராஜ், சாந்தா, அசோக், ஆதிலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

புதுச்சேரியில் பசுமைத் தாயகம் சார்பில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழா

புதுச்சேரி

           புதுச்சேரியில் பாமகவினர் சார்பில்  நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழா பசுமைத் தாயகம் நாளாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

            இதையொட்டி பாமக செயலர் ஆர்.அனந்தராமன் தலைமையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ஜூலை 25-ல் பிறந்த குழந்தைகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டது. பின்னர் கட்சி நிர்வாகிகள் பைக்கில் ஊர்வலகமாக மங்களம் தொகுதியில் உள்ள விவேகானந்தர் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கே.அருள்முருகன், கட்சியின் ஆலோசகர் கா.கோ.ராமகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் சி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சட்டப்பேரவை முற்றுகை: 3 பாமக எம்எல்ஏக்கள் உட்பட 507 பேர் கைது

புதுச்சேரி:

               புதுச்சேரியில் பிராந்திய இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி, பாமகவினர் சட்டப்பேரவை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர். இதில் 3 பாமக எம்எல்ஏக்கள் உள்பட 507 பேரை பெரியகடை போலீசார்  கைது செய்தனர்.

                புதுச்சேரி மாநிலத்தில் அரசியல் அமைப்பு சட்ட ரீதியான இட ஒதுக்கீடு இருந்தும், பிராந்திய இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதை கண்டித்தும், பிராந்திய இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இமாகுலேட் மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட பாமகவினரை ஆம்பூர் சாலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் பாமக எம்எல்ஏக்கள் ஆர்.கே.ஆர்.அனந்தராமன், என்.ஜி.பன்னீர்செல்வம், கே.பி.கே.அருள்முருகன் உள்பட 507 பேர் கைது செய்யப்பட்டனர். கட்சியின் மாநிலச் செயலர் கே.சி.ராமகிருஷ்ணன், துணைச் செயலர் வி.பி.பி.வேலும், பொருளாளர் ஜெ.கோபி உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.