ஏ.கே.மூர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏ.கே.மூர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சென்னை பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி சார்பில் உயர்நீதி மன்றத்தில் மனு

சென்னை:

         
பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி  சார்பில் மூத்த வக்கீல் பி. வில்சன், வக்கீல்கள் என். ஜோதி, கே. பாலு, தண்டபாணி உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி சிவஞானம் கியோர் முன் ஜராகி முறையீடு செய்தனர்.

அப்போது வக்கீல் பி. வில்சன், வக்கீல்கள் என். ஜோதி, கே. பாலு, தண்டபாணி
கூறியது:- 

              சென்னை மாநகராட்சி தேர்தலில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதை தடுக்க மாநில தேர்தல்
ணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. ளுங்கட்சிக்கு தரவாக தேர்தல் ணையாளர் சோ. அய்யர் செயல்பட்டுள்ளார். ஐகோர்ட்டு உத்தரவை மாநில தேர்தல் ணையம் முழுமையாக செயல்படுத்தவில்லை. கவே சோ. அய்யர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், தேர்தல் ணைய செயலாளர் சேவியர் கிறிஸ்சோ நாயகர் கியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரவேண்டும்.

            வன்முறை சம்பவங்கள் குறித்து தேர்தல்
ணையம், காவல்துறையிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. வீடியோ படம் எடுக்கப்படாத வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது.   18 வார்டுகளில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றுதல் சம்பவம் நடந்துள்ளன. இதனால் மக்கள் பீதி அடைந்து வாக்களிக்க முன் வரவில்லை. ஆகவே ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்கவேண்டும். சென்னை மாநகராட்சிக்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் முறையிட்டனர்.  

            இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இது குறித்து மனு தாக்கல் செய்யும்படியும், அந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி புஷ்பாநகர், மகாலிங்கபுரம், பகுதிகளில் வாக்கு சேகரிப்பு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/4490641e-d20f-4d26-b4be-eb835b8508ce_S_secvpf.gif
சென்னை:

         சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி புஷ்பாநகர், மகாலிங்கபுரம், பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று மாம்பழம் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். 
அப்போது சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி பேசியது:-

          இத்தனை ஆண்டுகளாக 2 கட்சிகளுக்கு மாறி மாறி ஓட்டு போட்டீர்கள். ஒருத்தர் சிங்கார சென்னையை உருவாக்குவோம் என்றார். இன்னொருத்தர் எழில்மிகு சென்னையை உருவாக்குவோம் என்றார். ஒழுகாத வீடு, உடுத்த உடையெல்லாம் தருவோம் என்று வாக்குறுதி தந்தார்கள். நிறைவேற்றினார்களா?  குறுகிய சென்னையில் கூட குப்பை களை அகற்றி சுகாதாரத்தை கொடுக்கவில்லை. இனி கரேட்டர் சென்னையை எப்படி அழகுபடுத்துவார்கள்? ஆளுங்கட்சி ஆட்சிக்கு வந்தால்தால் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்ற தவறான பிரசாரத்தை செய்கிறார்கள். இதுவரை ஆளுங் கட்சி மேயர்கள் இருந்தபோது என்ன சாதித்தார்கள்?

                சில பாலங்கள், பூங்காக் களை உருவாக்கினால் போதுமா? மக்களின் அடிப் படை தேவைகள் பூர்த்தியாகி விடுமா? மெயின் ரோடுகள் நன்றாக உள்ளது. உட்புற பகுதிகள் பல இடங்களில் கிராமப்பகுதிகளை விட மோசமாக உள்ளது. எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். சென்னையின் முன்னேற்றத்துக்காக பல திட்டங்கள் வைத்து இருக்கிறேன். பள்ளிகளில் தரமான கட்டிடங்கள், தரமான கல்வி, சுமையில்லாத கல்வி, கட்டாய கல்வி, சுகாதார மான குடிநீர், நல்ல சாலைகள், குப்பை யில்லாத, கொசு ஆதிக்கம் இல்லாத சென்னையை உருவாக்குவேன். குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு களுக்கு வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்குவேன்.

            தமிழர் திருநாளில் ஏழைகள் வசிக்கும் குடிசை மாற்று வாரிய வீடுகள் வெள்ளையடித்து தரப்படும். நீங்க நல்லா இருக்க பா.ம.க.வுக்கு ஆதரவு தாருங்கள். மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தால் சொன்னதை செய்து உங்களிடம் பாராட்டு பெறுவேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பு

        
 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/edea9792-9786-47d2-8975-a76ec3d67dcd_S_secvpf.gif

        சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் வியாசர்பாடி, கொடுங்கையூர் உள்பட பெரம்பூர் பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். முன்னதாக ஏ.கே.மூர்த்தி ஆர்.கே.நகர் பகுதியில் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார்.

அப்போது
சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி பேசியது


         ‘’என்னை மேயராக வெற்றி பெற செய்தால் எல்லா தரப்பு மக்களும் விரும்பும் நேர்மையான, திறமையான நிர்வாகத்தை தருவேன்.  சர்வதேச தரத்துக்கு இணையாக சென்னை நகரை மாற்றிக்காட்டுவேன். மாநகராட்சி மயான பூமிகள் அனைத்தும் நவீன முறையில் பராமரிக்கப்படும்.  மயானபூமி என்றாலே திரும்பி பார்க்க அச்சப்படும் நிலையை மாற்றி பூங்காக்கள் அமைத்து எழில் கொஞ்சும் பகுதியாக மாற்றி அமைப்பேன்.காவலாளிகள் நியமித்து பொழுது போக்குக்காக பொதுமக்கள் வந்து செல்லும் நிலையை உருவாக்குவேன்.

            வழிபாட்டு தலங்களுக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். வழிபாட்டு தலங்களின் நிர்வாகிகள் அனுமதி பெற்று மாநகராட்சி ஊழியர்களே சுத்தம் செய்ய ஏற்பாடு செய்வேன். அவர்களை அசிங்கப்படுத்துவதை தடுத்து கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் இருக்கும் இடங்களை எல்லோரையும் கவரும் வகையில் பராமரிக்கப்படும். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் சென்னையில் மாற்றத்தை ஏற்படுத்துவேன்’’ என்று பேசினார். அவருடன் ஜெயராமன், சத்யா மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்கள் உடன் சென்றனர்

சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி மதுரவாயல் தொகுதியில் வாக்கு சேகரிப்பு

http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/3c42023a-49b6-41ed-83e7-d940e9d6c89c_S_secvpf.gif
சென்னை

           சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி மதுரவாயல் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாம்பழம் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்தனர். சில தெருக்களில் மாம்பழம் சின்னத்தை கோலமிட்டு இருந்தனர். பொதுமக்கள் பலர் அந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரி மனு கொடுத்தனர்.

அவர்கள் மத்தியில்    சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர்  ஏ.கே.மூர்த்தி கூறியது:-

             சென்னை நகரை ஒட்டி இருக்கும் மதுரவாயல், வளசரவாக்கம், போரூர், நெசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் எந்த வசதியும் இல்லாமல் மிக மோசமாக உள்ளது. சாலைகள் சரியில்லை. வீதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. பொதுமக்கள் தண்ணீருக்காக திண்டாடுகிறார்கள். கிணற்று தண்ணீர் சரியில்லாததால் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் கூட தண்ணீர் விலைக்கு வாங்குகிறார்கள்.

             எனது பிரசாரத்தில் மக்கள் படும் கஷ்டங்களை நேரில் பார்த்தேன். என்னை மேயராக தேர்வு செய்தால் தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் நிலையை மாற்றுவேன். அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்றுவேன். சென்னைக்கு இணையாக இந்த பகுதியில் வசதிகள் செய்து கொடுப்பேன். மதுரவாயல் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பட்டா இல்லாமல் அவதிப் படுகிறார்கள். கேட்டால் ஏரி புறம்போக்கு என்கிறார்கள். அப்படி பார்த்தால் சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன.

           இப்போது அவை இருந்த அடையாளம் கூட இல்லை. கடந்த ஆட்சியில் 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறினார்கள். வீடுகட்டி குடியிருக்கும் 2 சென்ட் நிலத்துக்கு கூட அவர்களால் பட்டா கொடுக்க முடியவில்லை. என்னை மேயராக தேர்வு செய்தால் அனைவருக்கும் பட்டா கிடைக்க ஏற்பாடு செய் வேன்.  இவ்வாறு அவர் கூறினார். 

சென்னை பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வாக்கு சேகரிப்பு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/f9c4a430-0717-4515-87fb-ce3d8541ee2b_S_secvpf.gif
 
சென்னை:

               சென்னை பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி மெரீனா கடற்கரை மற்றும் மீனவர் குப்பம் பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். மைலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று மாம்பழம் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். 
 
சென்னை பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி பேசியது:-

             மெரீனா கடற்கரையை அழகுபடுத்த பல கோடிகளை செலவிட்டுள்ளனர். ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு நவீன வசதிகள் இல்லை. நடைபாதை வியாபாரிகள் கடைவசதி, மின்வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் விடுத்தனர். எனக்கு வாய்ப்பளித்தால் வெளி நாடுகளில் உள்ளதை போல் கடற்கரையை நவீனப்படுத்த முயற்சி எடுப்பேன்.

           வியாபாரிகளுக்கும் நிரந்தர கடைகள் தனி இடத்தில் அமைத்து கொடுப்பேன். மீனவர் குடியிருப்புகளுக்கு பாதிப்பு இல்லாமல் வெளிநாட்டு தொழில் நுட்பத்துடன் கடற்கரை சாலை அமைத்திட மத்திய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுப்பேன். இதன் மூலம் மெரீனா கடற்கரை இன்னும் அழகுபெறும். உலகம் முழுக்க இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். 
 
             மீனவ கிராம மக்கள் கட்டு மரங்களை நிறுத்தவும், வலைகளை உலர்த்தவும் முடிய வில்லை என்று முறையிட்டனர். அவர்களுக்கும் கடற்கரையில் தனி இடவசதி அமைத்து கொடுக்கப்படும். மக்களுக்காக போராடவும் தொண்டாற்றவும் வாய்ப்பளியுங்கள்.  இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தில் ஜெயராமன், ஜமூனாகேசவன், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி திருவொற்றியூர் பகுதியில் வாக்கு சேகரிப்பு

 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/b9ea3895-b28c-4116-bc1c-5ba45d5333a8_S_secvpf.gif
 
சென்னை:
 
          சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிடும் ஏ.கே. மூர்த்தி  வெள்ளிக்கிழமை  கத்தி வாக்கத்தில் பிரசாரம் செய்தார். கத்திவாக்கம், திருவொற்றியூர் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் திறந்த ஜீப்பில் சென்று மாம்பழம் சின்னத்துக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.  
 
வாக்காளர்கள் மத்தியில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிடும் ஏ.கே. மூர்த்தி  பேசியது 
 
               நான் மக்களுக்காக போட்டியிடுகிறேன். மக்களை நம்பியே இந்த தேர்தலில் நிற்கிறேன். எனக்கொரு வாய்ப்பளித்தால் வடசென்னை பகுதியையும் முன் மாதிரி பகுதியாக மாற்றுவேன். மத்திய, மாநில அரசின் உதவி பெற்று கடலரிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பேன். தென் சென்னை பகுதியில் இருக்கும் பீச் போல் வடசென்னை பகுதியின் கடற்கரையும் சுற்றுலா தலமாக மாற்றுவேன் என்றார்.

             முன்னதாக திருப்பதி குடை ஊர்வலம் சென்ற பக்தர்களிடம் ஏ.கே. மூர்த்தி ஆதரவு திரட்டினார். அவர்களுடன் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார். பக்தர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பிரசார நிகழ்ச்சியில் கட்சியின் துணை பொது செயலாளர் ரவிராஜ், மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், நகர செயலாளர் தேவராஜ், அமுதம் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி வேட்பு மனு தாக்கல்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/b6763112-ea5d-4603-8d3c-b0dc0630fc5f_S_secvpf.gif
 
சென்னை:

          சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஏ.கே.மூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று  காலை 11 மணிக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயனிடம் ஏ.கே.மூர்த்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

         முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், வக்கீல் பாலு ஆகியோர் உடன் சென்றனர். 
 
மனுதாக்கல் முடிந்ததும் அன்புமணி  கூறியது:-

            தமிழ்நாட்டில் ரெயில்வே துறையில் சாதனைகளை தொடங்கியவர் ஏ.கே.மூர்த்தி. அதுபோன்ற சாதனைகளை சென்னை நகர மக்களுக்கும் அவர் செய்திட வாய்ப்பளிக்க வேண்டும். குப்பை இல்லாத, கொசு இல்லாத, பசுமையான மாநகரமாக மாற்றுவதற்கு ஏ.கே.மூர்த்தி முயற்சி மேற்கொள்வார். பா.ம.க. தனித்து போட்டியிட்டாலும் ஏ.கே.மூர்த்தி அனைவருக்கும் அறிமுகமானவர். எல்லோரிடமும் சகஜமாக பழகுவார்.

     மக்கள் அவரை கட்சிக்கு அப்பாற்பட்டு தங்கள் சேவகனாக பார்ப்பார்கள். பாராளுமன்ற தேர்தலின் போது புறநகர் பகுதியில் கணிசமான வாக்குகளை பெற்றார். அப்பகுதிகள் இப்போது சென்னையுடன் இணைந்து இருக்கிறது. மக்கள் நிச்சயம் அவரை வெற்றிபெற செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.இவ்வாறு அன்புமணி கூறினார்.

ஏ.கே.மூர்த்தி கூறும்போது, 
 
             நான் மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் என்னை மேயர் வேட்பாளராக அறிவித்துள்ளார். மக்கள் எனக்கொரு வாய்ப்பளித்தால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கவும், சுத்தமான குடிநீர் கிடைக்கவும் பாடுபடுவேன் என்றார். பின்னர் வெளியே திரண்டு இருந்த பா.ம.க. தொண்டர்கள் ஏ.கே.மூர்த்திக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் பிரகாஷ், கன்னியப்பன், ஜமுனாகேசவன், சுரேஷ்குமார், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 

சென்னை மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி மற்றும் கவுன்சிலர் பதவிக்கான வேட்பாளர்கள் அறிமுகம்


http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/f92afea2-b881-4cad-9116-8bf4f10d1cf2_S_secvpf.gif


சென்னை:
          சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ம.க. வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி போட்டியிடுகிறார். இவர் நேற்று முதல் பிரசாரத்தை தொடங்கினார். அண்ணாநகரில் நடந்த 67 கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் ஏ.கே.மூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

            இன்று ஆலந்தூர், சோழிங்க நல்லூர், சைதாப்பேட்டை, தி.நகர், விருகம்பாக்கம் உள்பட 69 கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வேளச்சேரியில் நடந்தது. அதன் பிறகு ஏ.கே.மூர்த்தி வேளச்சேரியில் பிரசாரத்தை தொடங்கினார். ஒவ்வொரு பகுதியாக சென்று ஆதரவு திரட்டினார்.
 
           நிகழ்ச்சியில் மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.எல். ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம், மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், மாவட்ட செயலாளர் கன்னியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  மாலை திருவொற்றியூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம், எழும்பூர் உள்பட 67 கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ராயபுரத்தில் நடக்கிறது


உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சென்னை மேயர் வேட்பாளராக ஏ.கே.மூர்த்தி அறிவிப்பு

http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/41787_103611253037582_5387690_n.jpg


          உள்ளாட்சி தேர்தலில்  பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுவதால், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பட்டியலில் 6 மேயர் பதவிகளுக்கான வேட்பாளர்கள், 24 பேரூராட்சித் தலைவர்கள், 60 நகர பஞ்சாயத்துத் தலைவர்களுக்கான பட்டியலை நேற்று  அறிவிக்கப்பட்டது. சென்னை மேயர் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக ஏ.கே.மூர்த்தி போட்டியிடுகிறார்.


உள்ளாட்சி தேர்தல் 2011: சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு பா.ம.க. சார்பில் ஏ.கே. மூர்த்தி விருப்ப மனு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/54a95bee-e82d-4d8f-840e-816ec042536b_S_secvpf.gif
 
 
சென்னை

          சென்னை மாநகராட்சி தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இன்றும், நாளையும் விருப்ப மனு பெறப்படுகிறது.  

           மேயர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் மத்திய 
  அமைச்சர் ஏ.கே. மூர்த்தி பா.ம.க. தலைவர் ஜி.கே. மணியிடம் விருப்ப மனு கொடுத்தார்.  கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட முத்துக்குமார், டி.கே. சேகர், சைதை சிவா, சுரேஷ்குமார், கிருஷ்ண மூர்த்தி, ஜமுனா கேசவன், தாமோதரன், பிரேமா சக்கரபாணி, கிண்டி வேணு உள்பட பலர் மனு கொடுத்தனர்.

விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஜி.கே. மணி கூறியது:-  


           மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. மேயர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து ஏ.கே. மூர்த்தி மனு தந்துள்ளார். அவர் சிறந்த மக்கள் சேவையாளர். மேயர் வேட்பாளர் யார் என்பதை கட்சி மேலிடம் ஆய்வு செய்து அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர்  ஏ.கே. மூர்த்தி  கூறியது
 
            அனைத்து வார்டுகளிலும் பா.ம.க. போட்டியிடும். நாங்கள் வெற்றி பெற்றால் சென்னை மாநகராட்சியை முன் மாதிரி மாநகராட்சியாக மாற்றுவோம் என்றார்.

இடஒதுக்கீட்டை கொச்சைப்படுத்தும் அரக்சன் திரைப்படத்திற்கு எதிராக பாமக ஆர்ப்பாட்டம்



http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/24668bfc-c792-42c1-a9b9-347e7e4c1fde_S_secvpf.gif
 
           மத்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கையை எதிர்க்கும் காட்சிகளும், வச னங்களும் படத்தில் இடம் பெற்றிருப்பதாகவும், அவை களை நீக்கவேண்டும் என்றும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. 
 
             “அரக்சன்” படத்தை திரையிட்டால், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட லாம் என்று கருதியதால் உ.பி., பஞ்சாப், ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் அந்த படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டது.
 
              இந்த 3 மாநிலங்களை தவிர்த்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங் களிலும் ஆராக்ஷன் படம் வெளியிடப்பட்டது. சென்னையில் சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், ஈகா, பி.வி.ஆர். மெலோடி, மாயாஜால், ஏ.ஜி.எஸ்., பேம் நேஷனல் ஆகிய தியேட்டர் களில் ஆராக்ஷன் படம் திரையிடப்பட்டுள்ளது.
 
              இந்த படத்தை தடை செய்யக்கோரி சத்யம் தியேட்டர் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சென்னை மாவட்ட அமைப் புச் செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். கவுன் சிலர்கள் வெங்கடேசன், ஏழுமலை, ஜமுனா கேசவன், செயலாளர் சிற்றரசு உள்பட 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
                   “ தடை செய், தடை செய் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆராக்ஷன் படத்தை தடை செய்” என்று கோஷம் எழுப்பினர்.   இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி கிடையாது என்பதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெருந்தலைவர் காமராஜர் 109-வதுபிறந்தநாள்: பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

 http://www.dailythanthi.com/images/news/20110716/all.jpg


            

             காமராஜர் பிறந்தநாளையொட்டி அண்ணாசாலை ஜிம்கானா கிளப் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு   பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி  மாலை அணிவித்தார்.

       சத்திய மூர்த்தி பவனில் காமராஜர் உருவப்படத்துக்கு தங்கபாலு தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து 100 ஏழைகளுக்கு இலவச வேட்டி- சேலை வழங்கப்பட்டது. இதில் வேலுத்தேவர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 
            பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, ஏ.கே. மூர்த்தி, மண்டல தலைவர் ஜெயராமன், பா.ஜனதா பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன், மாவட்டத் தலைவர் ஜெய்சங்கர், பொதுச்செயலாளர் சிவனேசன் தொகுதி தலைவர் சக்திவேல், வேளச் சேரி தொகுதி தலைவர் ஆறுமுகராஜ், தொகுதி செயலாளர் ஸ்கேன் சவுந்த், தென் சென்னை மாவட்ட செயலாளர் திருப்புகழ் மூவேந்தர் முன்னணி கழக பொதுச்செயலாளர் இசக்கி முத்து, பிரபு, திருநாவுக்கரசு, வீரபாண்டியன், பழனியப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உஞ்சை அரசன், இரா. செல்வம், சைதை பாலாஜி, இளவழகன், பார்வேந்தன், எஸ்.எஸ். பாலாஜி, நாகராஜ், அம்பேத் மோகன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், ஆர்.டி. சேதுராமன், ரவிக் குமார், ராஜாராம், திராவிடர் கழக பொருளாளர் கோ. சாமி துரை, கவிபூங்குன்றன், பார்வதி, தங்கமணி, மனோ ரஞ்சிதம், வெற்றி செல்வி, தலித் மக்கள் முன்னணி தலைவர் குமரி அருண் உள்பட பல்வேறு கட்சி பிரமுகர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

கருணாநிதியுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திப்பு




சென்னை:

          6வது முறையாக தமிழக முதல் அமைச்சராக கலைஞர் பொறுப்பேற்பது உறுதி என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.



          சென்னையில் திமுக தலைவர் கலைஞரை அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.


இச்சந்திப்புக்குப் பின்னர் பேசிய ராமதாஸ்,


 
             திமுக தலைமையிலான ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். 6வது முறையாக தமிழக முதல் அமைச்சராக கலைஞர் பொறுப்பேற்பது உறுதி. இச்சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார். 


மயிலம் தொகுதி பா.ம.க வேட்பாளர் இ.ரா.பிரகாஷை ஆதரித்து வல்லத்தில்அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்


நலத்திட்டங்கள் தொடர  

கருணாநிதி மீண்டும் முதல்-அமைச்சராக வேண்டும்; 

முன்னாள் மத்திய மந்திரி அன்பு மணி பிரசாரம் 



மயிலம் :

      மயிலம் தொகுதி பா.ம.க வேட்பாளர் பிரகாசை ஆதரித்து வல்லத்தில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி பேசினார். 
அப்போது  அன்புமணி கூறியது:-



             கலைஞர், சோனியா காந்தி, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், ஆகியோரது கூட்டணி வெற்றி கூட்டணி. இந்த கூட்டணி சமூக நீதிக்காக ஏற்பட்ட கூட்டணி. இங்கே போட்டியிடும் வேட்பாளர் பிரகாஷ் இதே தொகுதியை சேர்ந்த கீழ்மாம்பட்டை சேர்ந்தவர். பிரகாஷ் வெற்றி பெற மாம்பழ சின்னத்திற்கு வாக்களியுங்கள்.


              கலைஞர் திட்டங்களான ஒரு ரூபாய்க்கு அரிசி, 108 ஆம்புலன்ஸ், கலைஞர் காப்பீட்டு திட்டம் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் தொடரவேண்டுமானால் கலைஞர் 6-வது முறையாக மீண்டும் முதல் அமைச்சராக வேண்டும். எனவே இத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாசை வெற்றிபெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


             கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரிகள் செஞ்சி ராமச்சந்திரன், ஏ.கே.மூர்த்தி, மற்றும் கண்ணன் எம்எல்ஏ, விவசாய மைய மாநில தலைவர் சடகோபன், மாவட்ட செயலர் மணிமாறன், ஓன்றிய செயலாளர்கள் அண்ணா துரை, வேல்முருகன், மாவட்ட ஊராட்சி தலைவர் வசுந்தரா தேவி, சேட்டு, வக்கீல் ராஜேந்திரன், இளம் வழுதி, மாவட்ட இளைஞர் அணி சிட்டிபாபு, கன்னியப்பன், மாரி, தனஞ்செழியன், ஸ்ரீதர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்


கொளத்தூர் தொகுதியில் பிரசாரம்:

அதிக ஓட்டு வித்தியாசத்தில்

மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுவார்;

அன்புமணி பேச்சு


சென்னை:
           கொளத்தூர் சட்டமன்றத்  தொகுதியில் போட்டியிடும் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி  பிரசாரம் செய்தார். 
 
பெரம்பூர் காந்தி சிலை  அருகே  திறந்து வேனில் நின்று பேசியது:-

                  தமிழ்நாட்டில்  உள்ள 234 தொகுதிகளில் கொளத்தூர் தொகுதிதான் முதன்மையானது. இந்த தொகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள் ஏற்கனவே, மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த  போது பல்வேறு திட்டப்பணிகளை நிறைவெற்றியுள்ளார். துணை முதல்-அமைச்சராக இருந்தும்  ஏராளமான பணிகளை  செய்திருக்கிறார்.

              இந்த கூட்டணி   சமூக சமத்துவ கூட்டணி. எதிர் கூட்டணி சினிமா கூட்டணி, அது உண்மையான கூட்டணி அல்ல.  பா.ம.க. வின் கொள்கை உண்ண  உணவு, உடுக்க   உடை தரமான மருத்துவ சேவை  அளிப்பதுதான். தி.மு.க. அரசு அதை நிறை வேற்றி   வருகிறது. 6-வது  முறையாக கலைஞர் முதல்- அமைச்சர் ஆவது உறுதி.  இந்த அரசு சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்து இருக்கிறது. தமிழகம் முழுவதும் இந்த கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது. இது  சுனாமியாக மாறி மாபெரும் வெற்றியை  தரும். ஆடு,  மாடுகளை தருவதாக அ.தி.மு.க.வினர் கூறுகிறார்கள்.  இன்னும் மக்களை  பின்  நோக்கி கொண்டு செல்லுகிறார்கள். இது மக்களை  ஏமாற்றும் கூட்டணி.

                 5 ஆண்டுக்கு ஒரு முறை தான் ஜெயலலிதா வெளியே வருவார். பின்னர் கொடநாடு சென்று  விடுவார். கொளத்தூர்  தொகுதி வி.ஐ.பி. தொகுதி மட்டுமல்ல வி.வி.ஐ.பி. தொகுதி ஆகும். முதல்வர் தொகுதி  என்று கூட சொல்லலாம். ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் அமோக வெற்றி பெறுவார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெறும் வேட்பாளர் அவர்தான்.  இவ்வாறு அன்புமணி பேசினார்.

              முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி, வட சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் வி.எஸ்.பாபு, பகுதி செயலாளர் வி.எஸ். ரவி, கு.க.செல்வம், பாண்டியன், சுரேஷ்,  கொளத்தூர் பகுதி பா.ம.க. அமைப்பு செயலாளர் வி.ஜெ.சுரேஷ் ஆகியோர் உடன் சென்றனர்.   கொளத்தூர் தொகுதியில்  போட்டியிடும்  துணை முதல்- அமைச்சர்  மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக அவரது மனைவி துர்கா  ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.

                 இன்று 51-வது வட்டம்  தில்லை நாயகம் தெருவில் முஸ்லிம் மகளிர் அமைப்பு பெண்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். மகளிர் அமைப்பை சேர்ந்த மொபினா ஹாஜி   மற்றும் அமான் ஆகியோரிடம் ஓட்டு சேகரித்தார். பின்னர் 50-வது வட்டம்  செல்லியம்மன்  நகர் பகுதியில்   ஆதரவு திரட்டினார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வீடாக சென்று தன் கணவருக்காக  ஓட்டு கேட்டார். ராம்நகர், ஆர்த்தி  குடியிருப்பு பகுதிகளில் அவர் ஓட்டு வேட்டையாடினார். அவருடன்  முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன், கவிஞர் சல்மா, வக்கீல் கிரிராஜன், கவுன் சிலர் மாலினி ரமேஷ், பக்கிரி சாமி, செல்வம், அர்ச்சுனன், வக்கீல் சின்னராஜ்,  பாபு உள்பட பலர் சென்றனர்.

பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தா.மோ. அன்பரசனை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம்

ஜெயலலிதாவுக்கு தோல்வி

பயம் வந்துவிட்டது:

டாக்டர் ராமதாஸ் பேச்சு 

 
சென்னை:

           பல்லாவரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தா.மோ. அன்பரசனை ஆதரித்து குரோம்பேட்டை ஆஸ்தினாபுரம், கீழ்க்கட்டளை பகுதிகளில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார். 
 
அப்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:-

            பல்லாவரம் தொகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாலை வசதி, மின்விளக்கு, பஸ்நிலையம் உள்பட பல்வேறு பணிகளை தா.மோ.அன்பரசன் செய்து முடித்துள்ளார். தி.மு.க. அரசின் 5 ஆண்டு சாதனைகளையும், செய்யப்போகிற சாதனைகளையும், சொல்லி வாக்கு சேகரியுங்கள்.

              ஜெயலலிதாவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. கருத்து கணிப்பு என்று சிலர் கருத்து திணிப்பு நடத்துகின்றனர். இதையெல்லாம் நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள். தி.மு.க. அரசின் நலத் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் தமிழகத்தில் பயன் அடைந்துள்ளனர். எனவே களப்பணியாளர்கள் ஒவ்வொரு வாக்காளர்களையும் சந்தித்து தி.மு.க. அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும்.  இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

            இதில் ஏ.கே.மூர்த்தி, பல்லாவரம் நகர தி.மு.க. செயலாளர் இ.கருணாநிதி உள்பட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து ஏ.கே.மூர்த்தி பிரசாரம்

 செய்யக்கூடிய திட்டங்களை தி.மு.க. அறிவித்துள்ளது:

 

 மதுரவாயலில் ஏ.கே.மூர்த்தி பேச்சு




சென்னை:

        மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து ஏ.கே.மூர்த்தி பிரசாரம் செய்தார். 
அப்போது ஏ.கே.மூர்த்தி பேசியது:-

                   தமிழகத்தில் இதுவரை எந்த ஆட்சியும் செய்யாத சாதனையை கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. செய்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாலங்கள் கட்டி சாதனை செய்துள்ளனர். ஏழைகளுக்கு வீடு கட்ட நிதி உதவி, பெண்கள் மகப்பேறு, திருமண உதவி திட்டம், கிராமப்புற முன்னேற்ற திட்டம், இலவச ஆம்புலன்ஸ் வசதி என்று சாதித்து காட்டிய திட்டங்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.

                வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள். கலைஞர் ஆட்சியையும் பார்த்து கொண்டிருக்கிறீர்கள். அதற்கு முன்பு ஜெயலலிதா ஆட்சியையும் பார்த்தீர்கள். கலைஞர் சொன்னதை செய்து சிறப்பு பெற்றுள்ளார். இந்த தேர்தலிலும் செய்யக்கூடிய திட்டங்களைத்தான் தி.மு.க. அறிவித்துள்ளது. கலைஞர் சொன்னால் செய்வார். செய்ய முடியாத திட்டங்களை கேட்டு ஏமாந்து விடாதீர்கள். நல்லாட்சி தொடர தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.