வன்னியர்களின் ஒற்றுமையை குலைக்க முயற்சி: ஜெ.​ குரு குற்றச்சாட்டு


தருமபுரி:

                 வன்னியர்களின் ஒற்றுமையைக் குலைக்க திமுக,​​ அதிமுக கட்சிகள் முயற்சித்து வருகின்றன என வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ஜெ.​ குரு குற்றம் சாட்டினார்.​ ​ 

                  வன்னியர்களுக்கு கல்வி,​​ வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி ஜூலை 28-ம் தேதி மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.​ இதற்கான விளக்கப் பொதுக்கூட்டம் நல்லம்பள்ளியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.​ 

இதில் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ஜெ.​ குரு பேசியது:​ ​ 

                   வன்னியர்களின் ஒற்றுமையுணர்வை சீர்குலைக்கும் வகையில் திமுக,​​ அதிமுக கட்சிகள் செயலாற்றிவருகின்றன.​ திமுக-வின் வளர்ச்சிக்கும்,​​ ஆட்சி பொறுப்புக்கும் வன்னியர்கள்தான் அதிகமாக பாடுபட்டுள்ளனர்.​ அதிமுக ஆட்சியில் நடந்த பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை கைதியாக இருப்பவர்கள் வன்னியர்கள்.​ ​ வாக்குகள் அளிப்பதற்காக மட்டுமே வன்னியர்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன.​ வரலாற்றுச் சிறப்புமிக்க வன்னிய இனம் ஒன்றிணைந்தால் தமிழகத்தை வன்னியர்கள்தான் ஆட்சி செய்வார்கள்.​ ​​ ​ 

                   
                      இடஒதுக்கீடு போராட்டத்தில் வன்னியர்கள் 21 பேர் இறந்தனர்.​ ஆனால்,​​ 107 சாதிகளுக்கும் சேர்த்து 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.​ இவற்றில் வன்னியர்களுக்கு 7 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது.​ ​ மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தமிழகத்தில் அதிக பெரும்பான்மையுள்ள வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.​ தற்போது தமிழகத்தில் முக்கியப் பதவிகளில் உள்ளவர்களின் சாதிகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் அவர்.​ ​ கூட்டத்துக்கு வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பாடி செல்வம் தலைமை தாங்கினார்.​ பாமக மாநில துணைப் பொதுச் செயலர் அ.​ சரவணன்,​​ தருமபுரி எம்எல்ஏ இல.​ வேலுச்சாமி,​​ மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எஸ்.பி.​ வெங்கடேசுவரன்,​​ மாவட்டச் செயலர் வணங்காமுடி,​​ மாவட்டத் தலைவர் அரசாங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்: