பாமக போராட்டத்தால் படாளம் சர்க்கரை ஆலை திறப்பு: ராமதாஸ்

மதுராந்தகம்:
 
                பாமக போராட்டத்தால்தான் படாளம் சர்க்கரை ஆலை திறக்கப்பட்டது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பாமக சார்பில் மதுராந்தகம், அச்சிறுபாக்கம் ஆகிய 2 இடங்களில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கான பயிற்சி முகாம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
 
இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பேசியது: 
 
                      படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க விவசாயிகளைத் திரட்டி 2 முறை போராட்டம் நடத்தியதன் பலனாக அரசு ஆலையை திறந்துள்ளது. பாமக ஆட்சிக்கு வந்தால் போடப்படும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்துவகற்காகத்தான் இருக்கும். சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வருவோம் என்றார்.

0 கருத்துகள்: