மழை நிவாரண தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்: பா.ம.க. வலியுறுத்தல்

புதுச்சேரி:

               பா.ம.க.வின் இளைஞர் அணி புதுவை மாநில பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் 45 அடி ரோட்டில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பா.ம.க. மாநில செயலாளர் அனந்தராமன் எம்.எல். ஏ. தலைமை தாங்கினார்.

                மாநில இளைஞர் அணி தலைவர் தங்க.அறிவழகன், செயலாளர்கள் மாதவன், சுரேஷ் மற்றும் மாநில துணை தலைவர்கள், துணை செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மதியழகன் வரவேற்றார்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-


               
புதுவை மாநில இளைஞர் பொறுப்பாளர்களை நியமனம் செய்த டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் ஜி.கே.மணி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து கொள்வது. கட்சிக்கு இளைஞர் அணி பக்கபலமாக இருந்து தொகுதி வாரியாக கட்சி கொடி ஏற்றி விழாவை நடத்துவது.

              புதுவையில் வெள்ள சேதங்களை அரசு உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்து சேத மதிப்பீட்டு அறிக்கையை தயார் செய்து அதன் மூலம் மத்திய அரசை அணுகி வெள்ள நிவாரண நிதி பெற்று பொது மக்களின் துயரை துடைக்க வேண்டும்.

                கிராம பஞ்சாயத்துகளுக்கு வெள்ள நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் மழை பாதிப்பை கருத்தில் கொண்டு மழை நிவாரண தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளதாக காலரா, பேதி, விஷகாய்ச்சல் போன்ற நோய் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நட வடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.


                 கூட்டத்தில் மாநில துணை செயலாளர்கள் ஜெயபாலன், வி.பி.பி.வேலு, பொருளாளர் கோபி என்ற கேபாலகிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் ராஜசேகர், ஆலோசகர் ராமகிருஷ்ண கவுண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: