பா.ம.க.வின் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் 20 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம்: அன்புமணி ராமதாஸ்

மாமல்லபுரம்:

          பசுமையான தமிழகத்தை உருவாக்க இதுவரை 20 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளோம் என, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

மாமல்லபுரத்தில் நடந்த பாமக பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ்,


               இளைஞர்கள் மது, புகையிலை போன்ற போதைப்பழக்கத்தினால் தவறான பாதையில் சென்று சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே தான் மதுவை ஒழிக்க வேண்டும் என்று பா.ம.க. போராடி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். பசுமையான, தூய்மையான தமிழகத்தை உருவாக்க பா.ம.க.வின் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் இதுவரை 20 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். நீர் ஆதாரங்களை பெருக்க 500 ஏரிகளை தூர்வாரி உள்ளோம். ஏரியில் உள்ள நீரை சேமிக்க 70 தடுப்பணைகளை கட்டி உள்ளோம். இவை போன்ற சமூக சேவையில் பா.ம.க. தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறது என்றார்.

0 கருத்துகள்: