சென்னை:
முதல்வர் கருணாநிதி சென்னை மேயர் இராமநாதன் செட்டியார் மண்டபத்தில் நடைபெற்ற பாமக நிறுவனர் ராமதாசின் பேரன் ப.சுகந்தன் - டீனா ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இந்த விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் கோ.க.மணி, நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக