சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு: பாமக வரவேற்ப்பு

          சாதிவாரி கணக்கெடுப்பு  நடத்தப்படும் என்ற அறிவிப்பை பாமக வரவேற்கிறது என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். 

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,

            சாதிவாரி கணக்கெடுப்பு  நடத்தப்படும் என்ற அறிவிப்பை பாமக வரவேற்கிறது. தமிழகத்தில் நலிந்த பிரிவினருக்கு அரசின் சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் போதிய அளவில் கிடைக்க இந்த கணக்கெடுப்பு பயனுள்ளதாக இருக்கும்.  நெசவாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் மேம்பாட்டுக்கு பெருமளவு நிதி ஒதுக்கீடு, மாத வருமானம் பெறும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வருமான வரி உச்ச வரம்பு உயர்வு, ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு புதிதாக கல்வி உதவித் தொகை ஆகியவை வரவேற்கத்தக்கது. மொத்தத்தில் நலிந்த பிரிவு மக்களின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது என்று ராமதாஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: