உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஆர்வம்

கடலூர் : 

            உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பா.ம.க.,வினர் 350க்கும் மேற்பட்டோர்  விருப்ப மனு அளித்தனர். 

            உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி தொகுதிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பா.ம.க., வினரிடம் கடலூர் கட்சி அலுவலகத்தில் நேற்று விருப்ப மனு பெறப்பட்டது. 

                மனுக்களை மாநிலத்துணை பொதுச் செயலர் ஈச்சங்காடு ப.சண்முகம் பெற்றுக் கொண்டார். மாவட்டச் செயலர் (கிழக்கு) தர்மலிங்கம், ஒன்றியச் செயலர் தட்சணாமூர்த்தி, முன்னாள் மாநில இளைஞரணி துணைபொதுச் செயலர் ஆறுமுகம் உட்பட பலர் உடனிருந்தனர். அதில் ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு சேடப்பாளையம் சகாதேவன் உட்பட 350க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு கொடுத்தனர்.

0 கருத்துகள்: