விருத்தாசலத்தில் பா.ம.க.சார்பில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு நாளையொட்டி மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி

விருத்தாசலம்:

          விருத்தாசலத்தில் பா.ம.க., சார்பில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு நாளையொட்டி மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி ஊர்வலம் நடந்தது.

            மாநில சொத்து பாதுகாப்பு குழுச் செயலர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்டச் செயலர் செல்வராசு முன்னிலை வகித்தார்.
பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பாலக்கரை வரை ஊர்வலமாக சென்று மவுன அஞ்சலி செலுத்தினர். நகர சேர்மன் முருகன், நகர தலைவர் சீனு, முன்னாள் துணை பொதுச்செயலர் திருஞானம், ஒன்றிய செயலர்கள் வெங்கடேசன், செல்வகுமார், ராஜவேல், சீனுஜோதி உட்பட பலர் பங்கேற்றனர்.


0 கருத்துகள்: