சென்னை:
விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக மாவட்டந்தோறும் விவசாயக் கல்லூரிகளை அமைக்க வேண்டும் என்று பா.ம.க. எம்.எல்.ஏ. எதிரொலி மணியன் கோரினார்.
பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ. எதிரொலி மணியன் பேசியது:
தமிழக அரசு தற்போது மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்தி வருகிறது. விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மாவட்டந்தோறும் விவசாயக் கல்லூரிகளை அமைக்க வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு சட்டவிரோதச் செயல்களுக்கு மதுப்பழக்கம் முக்கியமான காரணமாக உள்ளது. எனவே, மது இல்லாத முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும். சட்டம்-ஒழுங்கு போலீசாரையே முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புக்கும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புக்காக தனிப்படையை உருவாக்க வேண்டும் என்றார்.