விக்கிரவாண்டி தொகுதியில் பாமக எம்எல்ஏ-க்கள் ஆய்வு

விழுப்புரம்:

                 விக்கிரவாண்டித் தொகுதியில் பாமக ஆய்வுப் பணிகள் புதன்கிழமை முதல் 29-ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது என்று கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலர் பா. செந்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து , பாட்டாளி மக்கள் கட்சிகட்சியின் மாநில துணைப் பொதுச்செயலர் பா. செந்தமிழ்ச்செல்வன் வெளியிட்ட அறிக்கை

                    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள, மாநிலத் தலைவர் கோ.க. மணி தலைமையில் 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் அனைத்து கிராமங்களிலும் ஆய்வுப் பணிமேற்கொள்வர். அப்போது மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் உரிய ஒத்துழைப்பு தந்து சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

0 கருத்துகள்: