மயிலம்:
மயிலம் பகுதியில் வன்னியர் சங்க கொடியேற்று விழா நடந்தது.
மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு, கொடிமா கிராமங்களில் நடந்த விழாவிற்கு ஒன்றிய பா.ம.க., செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய வன்னியர் சங்க துணை செயலாளர் ஜானகிராமன், துணைத்தலைவர் குமார், இளைஞரணி சந்தோஷ்குமார் முன்னிலை வகித்தனர். வன்னியர் சங்க செயலாளர் அருணகிரி வரவேற்றார். மாநில வன்னியர் சங்க தலைவர் குரு எம்.எல்.ஏ., கொடியேற்றி வைத்து பேசினார். மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இளைஞரணி தன்ராஜ், கோபி மற்றும் நிர்வாகிகள் நந்தகோபால், சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக