ஆர்.லட்சுமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆர்.லட்சுமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜெயங்கொண்டம் நகராட்சியில் பா.ம.க. 3 வார்டுகளில் வெற்றி


ஜெயங்கொண்டம்: 

         ஜெயங்கொண்டம் நகராட்சியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட மீனாள் சந்திரசேகர் 6,429 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

                இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க., வேட்பாளர் லெட்சுமிகாந்தன் 5,952 ஓட்டுக்கள் பெற்று தோல்வி அடைந்தார். பா.ம.க., சார்பில் போட்டியிட்ட ஆர்.லட்சுமி 2,194 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் கலைவாணி 548 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார்.

மொத்தமுள்ள 21 வார்டுகளில் 

அ.தி.மு.க., 8 வார்டுகளிலும்,
தி.மு.க., பா.ம.க., தலா 3 வார்டுகளிலும், 
காங்கிரஸ் ஒரு வார்டிலும்,
சுயேட்சை வேட்பாளர்கள் 6 வார்டுகளிலும் 

வெற்றி பெற்றுள்ளனர்.

ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பா.ம.க வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம்

ஜெயங்கொண்டம்:


         ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிடும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். 

பாமகசார்பில் ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் லட்சுமி ரங்கநாதன் உள்ளிட்ட கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அண்ணா  சிலை அருகே பிரசாரத்தின் போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:

              திராவிட இயக்கங்கள் 42 ஆண்டுகளாக மக்களைச் சுரண்டி, கொள்ளையடித்து வருகின்றன. உள்ளாட்சித் தேர்தல் மிகமிக முக்கியமானது. இதில் அதிக இடங்களிள் பாமக வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி போன்றவைகளை நிறைவேற்ற முடியும்.  இப்போது, மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதை 50 சதமாக மாற்ற வேண்டும். பாமக ஆட்சிக்கு வந்தால், உள்ளாட்சி அமைப்பின் அனைத்துப் பொறுப்புகளிலும் பெண்களே இருப்பார்கள் என்றார் அவர். பிரசாரத்தில் கட்சியின் தலைவர் கோ க. மணி, சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. குரு, கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலர் க. வைத்தி, பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாமக வேட்பாளர் ஆர்.லட்சுமியின் வெற்றி வாய்ப்பு

ஜெயங்கொண்டம்:

           வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலின்படி, ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டியிடுகின்றனர். 

          ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவி, பெண்களுக்காக (பொது) ஒதுக்கப்பட்டதாகும். இந்தப் பதவிக்கு 15 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் 6 மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலின்படி. இந்தப் பதவிக்கு 9 பேர் போட்டியிடுகின்றனர்.  

வேட்பாளர்கள் விவரம்

           ஆர். லட்சுமி (பாமக), 
           ஜெ. கலைவாணி (காங்கிரஸ்), 
           இ. கவியரசி (தமிழர் நீதிக் கட்சி), 
           எம். சீதா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) 
           கே. பவானி (பாஜக), 
          ப. மீனாட்சி (விடுதலைச் சிறுத்தைகள்) 
          ச. மீனாள் (திமுக), க. ரோஜாரமணி (சுயே), 
          இரா. லட்சுமிகாந்தம் (அதிமுக).