கூடங்குளம் அணு உலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூடங்குளம் அணு உலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னையில்ஆர்ப்பாட்டம்

http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/16d0943e-d59f-40ad-b454-c74f4387ab65_S_secvpf.gif
சென்னை:

            கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக இடிந்தகரையில் பொது மக்கள் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.   இதற்கு ஆதரவு தெரிவித்து பா.ம.க.  நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 


ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க.  நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:-

            மக்களுக்கான போராட்டங்களை அரசியல் கட்சியினர் நடத்துவது வழக்கம். ஆனால் கூடங்குளத்தில் மக்களுக்கான போராட்டங்களை மக்களே நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். நாங்களும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துகிறோம்.  127 பேர் இடிந்தகரையில் 9-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு இருக்கிறார்கள். பா.ம.க. இந்த போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறது.

            அணு உலைகள் மனித இனத்தை அழித்துவிடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரஷியா, ஜப்பான், அமெரிக்காவில் நடந்த அணு உலை விபத்துகள் இதற்கு முன் உதாரணம் ஆகும். மராட்டியத்திலும் மேற்கு வங்காளத்திலும் பொது மக்கள் எதிர்ப்பின் காரணமாக அணு மின்நிலைய திட்டங்கள் ரத்து செய்துவிட்டனர்.

          ஜப்பானிலும், ஜெர்மனியிலும் இருக்கும் 75 அணு உலைகள் 2020-க்குள் மூடப்படும் என்று அந்த நாடுகள் அறிவித்துள்ளன. அணு உலைகள் இருக்கும் இடத்தில் இருந்து 5 முதல் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கதிர் வீச்சுகள் இருக்கும். இதனால் புற்றுநோய் பரவும். இந்த அணு உலைகளை அமைக்கக்கூடாது என்று 20 ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

            மக்கள் கருத்தை கேட்காமலேயே அணுமின் நிலைய திட்டத்தை தொடங்கியுள்ளனர். அணு மின் நிலையம் மூலம் 2.7 சதவீதம் தான் மின்சாரம் கிடைக்கும். எனவே மாற்று மின் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேரடியாக கூடங்குளம் செல்ல வேண்டும். மேலும் மத்திய அரசுடன் பேசி
இத்திட்டத்தை நிறுத்த வேண்டும். கல்பாக்கம் அணுமின் நிலையத்தை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

           ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன், வி.கே. பாண்டியன். வி.கே.சேகர், சுரேஷ்பாபு, கன்னியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி செப்டம்பர் 19ல் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னை:

பாமக தலைவர் கோ. க. மணி வெளியிட்ட அறிக்கை:

            கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி 127 பேர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். இதை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் செப்டம்பர் 19-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி சென்னையில் மிகப்பெரிய போராட்டம்: ஜி.கே.மணி



http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/a1d4c7fa-bd0d-473b-a234-cedabe57de5f_S_secvpf.gif             
 
 
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலையை கண்டித்தும், அதனால் கடற்கரையோர கிராம மக்களுக்கு பாதிப்பு இருக்கிறது என்று கூறியும் 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இடிந்தகரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பாதிரியார், கன்னியாஸ்திரிகள் உள்பட 127 பேர் மற்றும் மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.


             போராட்டத்துக்கு அனைத்து கட்சியினர், வியாபாரிகள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். உண்ணாவிரத போராட்டம் 6 வது நாளாக நேற்றும் நீடித்தது. இதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு, கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி பேசினார். 

அப்போது பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி பேசியது:

              1988 ம் ஆண்டு கடற்கரையோர கிராமங்களில் அணு உலை வேண்டாம் என்று பாட்டாளி மக்கள் கட்சிதான் போராட்டம் நடத்தியது. அன்று இந்த பகுதி மக்களிடையே விழிப்புணர்வு இல்லை. இன்று விழிப்புணர்வு ஏற்பட்டு போராட்டம் நடத்துகிறார்கள். நீங்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு விட்டு, வாருங்கள், பெரிய அளவிலான போராட்டங்களை நடத்துவோம். இங்கு கூடியிருக்கிறவர்களில் அதிகமானவர்கள் பெண்கள் உள்ளனர். பெண்கள் சக்தி மிகப்பெரிய சக்தி. எனவே இந்த போராட்டம் வெற்றி பெற்று விடும்.


              மாணவர்கள் நடத்திய போராட்டம் தோல்வியில் முடிந்ததாக வரலாறு இல்லை. உங்களது போராட்டத்தை மாணவர் போராட்டமாக மாற்றுங்கள். சென்னைக்கு சென்ற பிறகு அய்யா மருத்துவரிடம் பேசி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அணு உலையை மூட வலியுறுத்தி சென்னையில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். இவ்வாறு ஜி.கே.மணி பேசினார்.