இலவச கல்வி திட்டத்தை வலியுறுத்தி வருபவர் ராமதாஸ்


திருவண்ணாமலை:
            இலவச கல்வி, கட்டாயக்கல்வி, சமச்சீர் கல்வி திட்டத்தை வலியுறுத்தி வருபவர் ராமதாஸ் என வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு கூறினார். 
 போளூர் வட்டம், கேளூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற வன்னியர் சங்க பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:  
             வடதமிழகத்தில் 40 சதவீதம் குடிசை வீடுகள் உள்ளன. அதில் வன்னியர்கள்தான் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். தமிழகத்தில் 2 கோடி வன்னியர்கள் உள்ளனர். இவர்கள் ஒருங்கிணைந்து வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்க வேண்டும்.   கட்டாயக்கல்வி, சமச்சீர் கல்வி திட்டத்தைக் கொண்டுவந்து இலவச கல்வியை அனைவருக்கும் வழங்கவேண்டும் என்று கூறி வருபவர் ராமதாஸ்.   காவிரி, முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்னைகளை முன் வைக்கும் கட்சியாக பாமக விளங்குகிறது.   அன்புமணி ராமதாஸ், அரங்க வேலு போன்ற சிறப்பு மிக்க தலைவர்கள் பாமகவில் உள்ளனர் என்றார் அவர்.   பாமக மாநில துணைத்தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். பெரணமல்லூர் எம்எல்ஏ எதிரொலிமணியன், வன்னியர் சங்க மாநில துணை பொதுச்செயலர் இரா.காளிதாஸ், பாமக மாவட்ட தலைவர்கள் ஆ.வேலாயுதம், கி.ஏழுமலை, மாவட்ட செயலர் லா.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

0 கருத்துகள்: