ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பா.ம.க., ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: 

                  ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாதிவாரியாக கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தி கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். 

                   செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் ஏகாம்பரம், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் வாசு, பொதுக்குழு உறுப்பினர் கணேசமூர்த்தி, நகரச் செயலர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., ஆறுமுகம் சிறப்புரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி கோஷமிட்டனர். 

                     மதுராந்தகம் மதுராந்தகம் பஸ் நிலையத்திலிருந்து மாவட்ட செயலர் கங்காதரன் தலைமையில் பா.ம.க.,வினர் ஊர்வலமாக தேரடி தெரு, முருகன் கோவில் தெரு, மருத்துவமனை சாலை வழியாக சென்று தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல் காஞ்சிபுரத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவள்ளூர் திருவள்ளூர் பஜார் வீதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்ட செயலர் பாலயோகி தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் சீத்தாராமன், செல்வம், தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்து ஒன்றிய, நகர கிளை செயலர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: