சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து அறிவிப்பு வெளியிடக் கோரி கலைஞரை சந்திப்போம்: ஜி.கே மணி

                   சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து அறிவிப்பு வெளியிடக் கோரி, ராமதாஸ் தலைமையில் முதல்வர் கருணாநிதியை சந்திக்க திட்டமிட்டுள்ளோம் என, பாமக தலைவர் ஜி.கே.மணி கூறினார். நாகை மாவட்டம் திருக்கடையூரில் நடைப்பெற்ற பாமக ஆலோசனைக் கூட்டத்தில் ஜி.கே.மணி கலந்து கொண்டார். 

பின்னர் பேசிய பாமக தலைவர் ஜி.கே.மணி

                   அக்டோபர் 2ஆம் தேதிக்குள் சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லையென்றால் அக்டோபர் 11ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், அனைத்து சமுதாய சங்கங்களின் தலைவர்களை ஒருங்கிணைத்து முதல்வர் கருணாநிதியை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் நடுத்தர மற்றும் ஏழைகள் வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் சிமெண்ட், ஜல்லி, கம்பி போன்ற கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

0 கருத்துகள்: