கூட்டணி பற்றி கலைஞரிடம் பேசவில்லை: ராமதாஸ்






                 கூட்டணி பற்றி முதல்வர் கருணாநிதியிடம் எதுவும் பேசவில்லை என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

                    பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். ராமதாசுடன் பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்களும் இச்சந்திப்பில் இடம் பெற்றிருந்தனர். இச் சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

சந்திப்புக்கு பின்னர் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்

                     முதல்வர் கருணாநிதியுடன் நடந்த சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் சாதிசாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, 27 சமுதாய தலைவர்களுடன் சந்தித்தோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை என்றும், இதை தானும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

                    மிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ஜனார்த்தனிடம் இதுகுறித்து பேசி, நல்ல முடிவை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர இருப்பதால், உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என வலியுறத்தினேன். கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை என ராமதாஸ் தெரிவித்தார்.

0 கருத்துகள்: