செஞ்சியில் புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்: முன்னாள் மத்திய அமைச்சர்ஏ.கே. மூர்த்தி துவக்கி வைத்தார்

செஞ்சி : 

             விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து, புதுச்சேரிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தியின் சொந்த கிராமமான கீழ்மாம்பட்டு வழியாக, புதிய வழி தடத்தில் பஸ் இயக்கப்பட்டது. கீழ்மாம்பட்டில் நேற்று காலை நடந்த விழாவில் முன்னாள் அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். அரசு போக்குவரத்து கழக வர்த்தக பிரிவு பொது மேலாளர் சண்முகசுந்தரம், திண்டிவனம் கிளை மேலாளர் சவுக்கத் அலி, பா.ம.க., ஒன்றிய செயலர் வேலுச்சாமி, ஊராட்சி தலைவர் வள்ளிமாரி கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: