விழுப்புரம்:
சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வுக்கு 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 30 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த 3-ந்தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
தைலாபுரம் தோட்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநில துணைத் தலைவர் நா.ம.கருணாநிதி தலைமையில் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், இணை பொதுச்செயலாளர் இசக்கி படையாச்சி, உழவர் பேரியக்க தலைவர் சடகோபன் ஆகியோர் கொண்ட குழுவினர் விருப்ப மனுக்களை பெற்று வந்தனர்.
விருப்ப மனுக்கள் பெறுவது நேற்றுடன் முடிவடைந்தது. இதுவரை 6203 பேர் விருப்ப மனுதாக்கல் செய்துள்ளனர். வேளச்சேரி தொகுதியில் டாக்டர் அன்புமணி போட்டியிட சென்னை மாவட்ட பா.ம.க. அமைப்பு செயலாளர் ஜெயராமன் விருப்ப மனு கொடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அன்புமணி போட்டியிட கோரி இளைஞரணி மாநில துணை செயலாளர் விழுப்புரம் சிவகுமார், கடலூர் தமிழ்வாணன், நாகப்பட்டினம் பழனிசாமி, தஞ்சாவூர் வெங்கடேசன், விழுப்புரம் மாவட்ட பா.ம.க. செயலாளர் ரவி அலெக்ஸ் ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர்.
பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி செய்யாறு, புவனகிரி, செஞ்சி தொகுதிகளில் போட்டியிட பலர் விருப்ப மனு கொடுத்தனர். பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி போட்டியிட உழவர் பேரியக்க தலைவர் சடகோபன் மனு கொடுத்தார். ஜெயங்கொண்டம் தொகுதியில் வன்னியர் சங்க தலைவர் குரு போட்டியிட மாநில துணை பொதுச்செயலாளர் பாலு, ஜெயங்கொண்டம் மாவட்ட செயலாளர் வைத்தி மனு கொடுத்தார்.
தைலாபுரம் தோட்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநில துணைத் தலைவர் நா.ம.கருணாநிதி தலைமையில் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், இணை பொதுச்செயலாளர் இசக்கி படையாச்சி, உழவர் பேரியக்க தலைவர் சடகோபன் ஆகியோர் கொண்ட குழுவினர் விருப்ப மனுக்களை பெற்று வந்தனர்.
விருப்ப மனுக்கள் பெறுவது நேற்றுடன் முடிவடைந்தது. இதுவரை 6203 பேர் விருப்ப மனுதாக்கல் செய்துள்ளனர். வேளச்சேரி தொகுதியில் டாக்டர் அன்புமணி போட்டியிட சென்னை மாவட்ட பா.ம.க. அமைப்பு செயலாளர் ஜெயராமன் விருப்ப மனு கொடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அன்புமணி போட்டியிட கோரி இளைஞரணி மாநில துணை செயலாளர் விழுப்புரம் சிவகுமார், கடலூர் தமிழ்வாணன், நாகப்பட்டினம் பழனிசாமி, தஞ்சாவூர் வெங்கடேசன், விழுப்புரம் மாவட்ட பா.ம.க. செயலாளர் ரவி அலெக்ஸ் ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர்.
பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி செய்யாறு, புவனகிரி, செஞ்சி தொகுதிகளில் போட்டியிட பலர் விருப்ப மனு கொடுத்தனர். பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி போட்டியிட உழவர் பேரியக்க தலைவர் சடகோபன் மனு கொடுத்தார். ஜெயங்கொண்டம் தொகுதியில் வன்னியர் சங்க தலைவர் குரு போட்டியிட மாநில துணை பொதுச்செயலாளர் பாலு, ஜெயங்கொண்டம் மாவட்ட செயலாளர் வைத்தி மனு கொடுத்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக