நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடவேண்டும்

நெய்வேலி:

             நெய்வேலி புதுநகர் 27-வது வட்டம் யூரியா தெருவில் பாட்டாளி மக்கள் கட்சி கிளையின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

                உட்கிளை தலைவர் இளையபெருமாள், செயலாளர் கண்ணன், பொருளாளர் ஸ்டெல்லா மேரி மற்றும் தட்சிணா மூர்த்தி, பிரேம்நாத், திணேஷ், முத்துவேல், பாண்டியன், ஜோதிமணிகண்டன், ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தமிழக சட்டசபை தேர்தலில் நெய்வேலி தொகுதியில் தி.மு.க., பா.ம.க. கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படுமேயானால் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நெய்வேலி தொகுதியில் பா.ம.க. வேட்பாளரை வெற்றிபெற செய்வது. கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து விடுபட்ட வாக்காளர் பட்டியலை வீடு, வீடாக சென்று சரிபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்: