பா.ம.க. மாணவர் அணி நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் தியாகராய நகர், பொங்கு தமிழ் அறக் கட்டளை அலுவலகத்தில் நடந்தது.
அப்போது பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியது
‘’தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு முதலில் 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கிடைத்த தொகுதியை விட்டுக் கொடுப்பது இதுவரை நடந்ததில்லை. ஆனால் நாங்கள் கூட்டணியின் பொதுநலன் கருதி ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்கள் கூட்டணியில் காங்கிரசும் இடம் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் விட்டுக் கொடுத்தோம். பா.ம.க.வுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது இன்று மாலை அல்லது நாளைக்குள் முடிவாகி அறிவிக்கப்படும்.
தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. மற்றும் எங்கள் கட்சி தொண்டர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை. எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும். கூட்டணி தலைவர்களுடன் பிரசாரம் செய்வது குறித்து கலந்து பேசி முடிவு செய்வோம்’’ என்று கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக