ஆ.ரமேஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆ.ரமேஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சிதம்பரம் நகராட்சியில் 4வது முறையாக பா.ம.க.வேட்பாளர் ரமேஷ் வெற்றி

சிதம்பரம் :

          சிதம்பரம் நகராட்சியில் 4வது முறையாக பா.ம.க., வைச் சேர்ந்த ரமேஷ், வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். சிதம்பரம் நகர மன்றத்தில் 1996 தேர்தலில் பா.ம.க., சார்பில் 14வது வார்டில் பா.ம.க.,வைச் சேர்ந்த ரமேஷ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
           இதில் பா.ம.க., ரமேஷ் தொடர்ந்து 1996, 2001, 2006, தற்போதைய (2011) தேர்தலிலும் வெற்றி பெற்று தற்போது 4வது முறையாகவும் வெற்றி பெற்று கவுன்சிலர் பதவியை பிடித்துள்ளார். நான்கு முறையாக ஒரே வார்டில் நின்று வெற்றி பெற்று வார்டை தக்க வைத்து சாதனை படைத்துள்ளார்.
 

சிதம்பரம் நகராட்சியில் பா.ம.க.வேட்பாளர் ஆ.ரமேஷ் 4-வது முறை போட்டி

சிதம்பரம்:

           சிதம்பரம் நகராட்சியில் 3 முறை தொடர்ந்து வெற்றிபெற்ற பாமக.வைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ஆ.ரமேஷ்,   4-வது முறையாக மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

            சிதம்பரம் நகராட்சி 14-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் பாமக.வைச் சேர்ந்த ஆ.ரமேஷ். இவர் 1996-2001, 2001-2006, 2006-2011 ஆகிய காலங்களில் 3 முறை நகர்மன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவற்றில் இரண்டு முறை கட்சி சார்பிலும், ஒரு முறை சுயேச்சையாகவும்  நின்று வெற்றி பெற்றார். அடிப்படை வசதிகளை நிறைவேற்றியதால் தொகுதி மக்களிடையே நன்கு அறிமுகமான இவர், இப்போது நடைபெறவுள்ள நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 14-வது வார்டில் பாமக சார்பில் மீண்டும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.