சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாமக தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு ஆகியோர் இன்று முதல் அமைச்சர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பாமக தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு ஆகியோர் பாமக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். இச்சந்திப்பின்போது, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக