மாற்று கட்சியில் இணையும் எண்ணம் இல்லை : தி.வேல்முருகன் அறிவிப்பு

             முறையான காரணம் இன்றி முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.   இந்த தகவல் வெளியானதை அடுத்து கடலூர், பண்ருட்டி, நெய்வேலி பகுதிகளில்  ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் கட்சி அலுவலகம், நெய்வேலியில் உள்ள பா.ம.க. தொழிற்சங்க அலுவலகம் சூறையாடப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ம.க. கொடிக்கம்பங்களை அகற்றினார்கள். இந்த நிலையில் பா.ம.க. வில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகன் தி.மு.க.வில் சேரப்போவதாக கடலூர் பகுதியில் நேற்று தகவல் பரவியது. 

இதுபற்றி வேல்முருகன் கூறியது
 
            வேறு எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் எனக்கு இல்லை. இப்போதும் பா.ம.க. வில் தான் இருக்கிறேன். நான் நீக்கப்பட்டதாக கூறப்பட்டிருப்பது பற்றி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பா.ம.க. தொண்டர்களிடம் நீதி கேட்பேன். நான் நீக்கப்பட்டது சம்பந்தமாக இதுவரையிலும் எனக்கு எந்த தகவலும் முறைப்படி அனுப்பப்பட வில்லை. அப்படி ஒரு தகவல் வந்தால் அடுத்த கட்ட நடவடிக்கையை பின்னர் முடிவு செய்வேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கு தண்டனை: தமிழக அரசின் நிலை அதிர்ச்சி அளிக்கிறது , ராமதாஸ்


         பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து சனிக்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: 

          மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்ற உயர் நீதிமன்றத்தின் கேள்விக்கு, தமிழக அரசின் சார்பில் உள்துறை செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் மூவரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்வது தொடர்பான எல்லா வினாக்களுக்கும் கருத்து கூற விரும்பவில்லை என்றும், தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி அவர்கள் மூவரும் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது

   இது தமிழ் உணர்வாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம், மரணத்தின் விளிம்பில் போராடிக் கொண்டிருக்கும் 3 தமிழர்களையும் காப்பாற்றுவதில் முதல்வருக்கு அக்கறை இல்லை என்பதும், மக்களின் எழுச்சியை அடக்குவதற்காகவே பெயரளவில் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார் என்பதும் அம்பலமாகியிருக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.


கடலூர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கான தேர்தல்: பா.ம.க ஒரு இடத்தில் வெற்றி

கடலூர் :

          கடலூர் மாவட்டத்தில்  மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் பா.ம.க ஒரு இடத்தில் வெற்றி பெற்றார் .

பா.ம.க.,:  

வார்டு எண்: 26
வேட்பாளர் : கருணாகரன், 
ஓட்டுகள்: 8,676;  

ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்

சிதம்பரம் நகராட்சியில் 4வது முறையாக பா.ம.க.வேட்பாளர் ரமேஷ் வெற்றி

சிதம்பரம் :

          சிதம்பரம் நகராட்சியில் 4வது முறையாக பா.ம.க., வைச் சேர்ந்த ரமேஷ், வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். சிதம்பரம் நகர மன்றத்தில் 1996 தேர்தலில் பா.ம.க., சார்பில் 14வது வார்டில் பா.ம.க.,வைச் சேர்ந்த ரமேஷ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
           இதில் பா.ம.க., ரமேஷ் தொடர்ந்து 1996, 2001, 2006, தற்போதைய (2011) தேர்தலிலும் வெற்றி பெற்று தற்போது 4வது முறையாகவும் வெற்றி பெற்று கவுன்சிலர் பதவியை பிடித்துள்ளார். நான்கு முறையாக ஒரே வார்டில் நின்று வெற்றி பெற்று வார்டை தக்க வைத்து சாதனை படைத்துள்ளார்.
 

ஜெயங்கொண்டம் நகராட்சியில் பா.ம.க. 3 வார்டுகளில் வெற்றி


ஜெயங்கொண்டம்: 

         ஜெயங்கொண்டம் நகராட்சியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட மீனாள் சந்திரசேகர் 6,429 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

                இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க., வேட்பாளர் லெட்சுமிகாந்தன் 5,952 ஓட்டுக்கள் பெற்று தோல்வி அடைந்தார். பா.ம.க., சார்பில் போட்டியிட்ட ஆர்.லட்சுமி 2,194 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் கலைவாணி 548 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார்.

மொத்தமுள்ள 21 வார்டுகளில் 

அ.தி.மு.க., 8 வார்டுகளிலும்,
தி.மு.க., பா.ம.க., தலா 3 வார்டுகளிலும், 
காங்கிரஸ் ஒரு வார்டிலும்,
சுயேட்சை வேட்பாளர்கள் 6 வார்டுகளிலும் 

வெற்றி பெற்றுள்ளனர்.

பொ.மல்லாபுரம் பேரூராட்சித் தலைவர் பதவி பா.ம.க வேட்பாளர் க.சிவக்குமார் மூன்றாமிடம்

பொ.மல்லாபுரம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் க.முருகன் வெற்றி பெற்றுள்ளார்.
 
வாக்குகள் விவரம்: 
 
க.முருகன் (திமுக)-2,553, 
இரா.ராஜா (அதிமுக)-1,922, 
க.சிவக்குமார் (பாமக)-1,323, 
ந.குமரவேல் (தேமுதிக)-258, 
அ.ஆஜம்கான் (சுயே)-841, 
ரா.சீனிவாசன் (காங்கிரஸ்)-54.
 
மொத்தமுள்ள 15 வார்டுகளில் 
அதிமுக-5, 
பாமக-4, 
திமுக-2, 
தேமுதிக-2, சு
யே-2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
 

காரிமங்கலம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு பா.ம.க வேட்பாளர் ஏ.சத்யா வெற்றி

தருமபுரி:

      காரிமங்கலம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.சத்யா  2,194 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

           சுயேச்சை வேட்பாளர் எம்.சந்திரிகா (1,885 வாக் குகள்) 2-வது இடத்தையும், திமுக சீ.ஜெயந்தி (1,371) 3-வது இடத்தையும், அதிமுக ஜி.ஒச்சம்மாள் (977) 4-வது இடத்தையும், தேமுதிக சி.பூங்கொடி (190) 6-வது இடத்தையும் பெற்றனர்.

மொத்தமுள்ள 15 வார்டுகளில் 

அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகியவை தலா 3 இடங்களையும், 
சுயேச்சைகள் 4 இடங்களையும், 
பாமக ,தேமுதிக, ஆகியவை 
 தலா 1 இடத்தையும் கைப்பற்றின.

செந்துறை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க. வேட்பாளர் கண்ணகி வெற்றி

செந்துறை:
          அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட 12-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க. வேட்பாளர் கண்ணகி அ.தி.மு.க. வேட்பாளர் செல்வி, தி.மு.க. சார்பில் குழந்தை அம்மாள்,  உள்பட 5 பேர் போட்டியிட்டனர். நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நேரத்தில் இருந்தே தி.மு.க., பா.ம.க.வுக்கும் இடையே இழுபறி நிலை உருவானது.
 
                 முடிவில் 2 கட்சிகளுமே சம ஓட்டுகள் பெற்றது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் 3847 ஆகும். இதில் பா.ம.க. 1310 வாக்குகளும், தி.மு.க. 1303 ஓட்டுகளும் பெற்றது. தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டதில் பா.ம.க.வுக்கு 7 ஓட்டுகளும், தி.மு.க.வுக்கு 14 வாக்குகளும் கிடைத்ததால் சமநிலை ஏற்பட்டது.  எனவே ஓட்டுகள் மீண்டும் எண்ணப்பட்டது. அப்போதும் 2 கட்சிகளும் சமநிலையில் இருந்தது. உடனே குலுக்கல் முறையில் தேர்வு நடந்தது. இதில் பா.ம.க. வேட்பாளர் கண்ணகி வெற்றி பெற்றார். மாவட்ட கவுன்சிலர் 1-வது வார்டு பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் குணசேகரன் தேர்வானார். 5-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க. வேட்பாளர் தேன்மொழி வெற்றி பெற்றார்.

திட்டக்குடி பேரூராட்சியில் பா.ம.க.விற்கு இரண்டாம் இடம்

திட்டக்குடி, : 

        திட்டக்குடி பேரூராட்சியில் அ.தி.மு.க., வேட்பாளர் நீதிமன்னன் 2 ஆயிரத்து 119 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பா.ம.க., வேட்பாளர் முருகேசன் இரண்டாம் இடம் பெற்றார்.

           திட்டக்குடி பேரூராட்சித் தலைவர் பதவிக்கு 11 பேர் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க., வேட்பாளர் நீதிமன்னன் 5,329 ஓட்டுகள் பெற்று பா.ம.க., வேட்பாளர் முருகேசனை விட 2,119 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பா.ம.க., முருகேசன் 3,210,
தி.மு.க., பரமகுரு 2,366, 
த.மு.தி.க., வினாயகம் 458,
காங்., செல்லமுத்து 118, 
பா.ஜ., ரவி 98, 

சுயேச்சைகள் 

செந்தில் 167,
ராதாகிருஷ்ணன் 146,
சுயேட்சைகள் அருள்நிதி 109, 
உத்தமராஜா 39, 
கார்த்திகேயன் 23 ஓட்டுகள்
பெற்றார்.

மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 

அ.தி.மு.க., 11, 
தி.மு.க., 2, 
பா.ம.க., - தே.மு.தி.க., தலா ஒன்று, 
சுயேச்சைகள் 3 பேர் வெற்றி பெற்றனர். 
 
 
 
 
 
 
 

குறிஞ்சிப்பாடி ஒன்றியம் 10வது வார்டில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு வாய்ப்பு அளியுங்கள்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், 10வது வார்டில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக போட்டியிடும் திருமதி.ஜெயக்கொடி விஜயகாந்தி அவர்களுக்கு மாங்கனி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
Election Date: 19/11/2011

தேர்தல் நாள் : 19/11/2011

சென்னை பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி சார்பில் உயர்நீதி மன்றத்தில் மனு

சென்னை:

         
பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி  சார்பில் மூத்த வக்கீல் பி. வில்சன், வக்கீல்கள் என். ஜோதி, கே. பாலு, தண்டபாணி உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி சிவஞானம் கியோர் முன் ஜராகி முறையீடு செய்தனர்.

அப்போது வக்கீல் பி. வில்சன், வக்கீல்கள் என். ஜோதி, கே. பாலு, தண்டபாணி
கூறியது:- 

              சென்னை மாநகராட்சி தேர்தலில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதை தடுக்க மாநில தேர்தல்
ணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. ளுங்கட்சிக்கு தரவாக தேர்தல் ணையாளர் சோ. அய்யர் செயல்பட்டுள்ளார். ஐகோர்ட்டு உத்தரவை மாநில தேர்தல் ணையம் முழுமையாக செயல்படுத்தவில்லை. கவே சோ. அய்யர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், தேர்தல் ணைய செயலாளர் சேவியர் கிறிஸ்சோ நாயகர் கியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரவேண்டும்.

            வன்முறை சம்பவங்கள் குறித்து தேர்தல்
ணையம், காவல்துறையிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. வீடியோ படம் எடுக்கப்படாத வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது.   18 வார்டுகளில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றுதல் சம்பவம் நடந்துள்ளன. இதனால் மக்கள் பீதி அடைந்து வாக்களிக்க முன் வரவில்லை. ஆகவே ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்கவேண்டும். சென்னை மாநகராட்சிக்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் முறையிட்டனர்.  

            இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இது குறித்து மனு தாக்கல் செய்யும்படியும், அந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

திண்டிவனம் காந்திசிலை அருகில் பாமக வேட்பாளர்களை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இறுதி கட்ட பிரசாரம்

திண்டிவனம்:

            திராவிடக் கட்சிகளை வேரறுப்பதுதான் பாமகவின் தற்போதைய கொள்கை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

திண்டிவனம் காந்திசிலை அருகில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி கட்ட பிரசாரத்தில் பாமக நகராட்சித் தலைவர் பதவி வேட்பாளர் மற்றும் உறுப்பினர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து ராமதாஸ் பேசியது: 

          ""திண்டிவனம்நகரில் இது வரை எந்த நல்ல திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. திராவிட கட்சிகள் 44 ஆண்டுகள் நகராட்சியை ஆட்சி செய்துள்ளன. நல்ல திட்டங்கள் ஏதேனும் அவர்கள் செயல்படுத்தியிருந்தால் நானும் அவர்களுக்கே வாக்களிப்பேன். ஆனால் இது வரை அவர்களால் ஏமாற்றமே கிடைத்துள்ளது. புதிய திண்டிவனம் நகரத்தை பாமக உருவாக்கும் என நான் பல முறை உங்களுக்கு வாக்குறுதி அளித்தும் வாக்காளர்கள் அதைக் கேட்கவில்லை. இப்போது நகரில் நல்ல குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட்டாமல் உள்ளன. மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 

            பாமக நகராட்சித் தலைவர் வேட்பாளர் மலர்சேகர் (எ) குணசேகரனை வெற்றி பெற செய்தால் என்னுடைய நேரடி பார்வையில் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் துரிதமாக நடைபெறும். உங்களுக்கு பணி செய்ய பாமக சார்பில் நல்லவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து அவர்களது சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பாமக-வின் தற்போதைய கொள்கை திராவிடக் கட்சிகளை வேரறுப்பதுதான். தமிழ்நாட்டில் 2016-ல் பாமக ஆட்சி அமைக்கும்'' என்றார் ராமதாஸ்.நகரச் செயலர் ஜெயராஜ் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட முன்னாள் பாமக செயலர் ஏழுமலை, மாநில துணைத் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிமுகவினர் வாக்குச் சாவடிகளை கைப்பற்றி அத்துமீறல்: பாமக நிறுவனர் ராமதாஸ்கண்டனம்

சென்னை:

 பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

           சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிமுகவினர் திட்டமிட்டபடியே முறைகேடுகளை அரங்கேற்றி வருகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்திலிருந்தே சென்னை மாநகரத்திற்குட்பட்ட எல்லா வாக்குச் சாவடிகளிலும் குண்டர்களின் உதவியுடன் அ.தி.மு.க.வினர் கள்ளவாக்கு போட்டு வருகின்றனர்.

         சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பெருங்குடி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் கந்தன் அவரது ஆதரவாளர்களுடன் சென்று வாக்குச் சாவடிகளை கைப்பற்றி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்குகளை செலுத்தியுள்ளார்.  இதேபோல் சென்னை மாநகரின் எல்லா பகுதிகளிலும் அ.தி.மு.க.வைச்  சேர்ந்த அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்டோர் தங்களது பகுதியிலுள்ள வாக்குச் சாவடிகளை கைப்பற்றி கள்ளவாக்குகளை செலுத்திவருகின்றனர். சைதாப்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் வாக்களிக்க வரும் மக்களை அ.தி.மு.க.வுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று அங்குள்ள முகவர்கள் மிரட்டியுள்ளனர். சிலர் வாக்காளர்களின் கைகளைப் பற்றி அ.தி.மு.க. சின்னத்தில் வாக்களிக்க வைத்துள்ளனர்.

            வாக்குச் சாவடியிலிருந்த அதிகாரிகளோ, அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த காவலர்களோ இதை கண்டுகொள்ளவில்லை. இந்த முறைகேடுகள் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையர்  சோ.அய்யர், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் திரிபாதி ஆகியோருக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாநகராட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியினர் பெருமளவில் முறைகேடு செய்வார்கள் என்ற ஐயத்தில்தான் தேர்தலை முறையாக நடத்தும்படி தேர்தல் ஆணையத்திற்கு ஆணையிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

            அதன் அடிப்படையில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை. சென்னையின் பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் வீடியோ மூலம் வாக்குப்பதிவு படம்பிடிக்கப்படவில்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது தேர்தல் ஆணையமும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடந்து கொண்டிருப்பது உறுதியாகிறது. மாநகராட்சித் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவிருக்கும் நிலையில், மீதமுள்ள நேரத்திலாவது வாக்குப்பதிவு முறையாக நடப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையரும், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் மீது நீதிமன்றம் மூலம் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

மதுராந்தகம் அருகே சித்தாமூர் ஒன்றியத்தில் பா.ம.க. சின்னம் இல்லாததால் ஓட்டுப்பதிவு நிறுத்தம்

மதுராந்தகம்:

              மதுராந்தகம் அருகே சித்தாமூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட தண்டலம் ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை ஓட்டுப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 600-க்கும் மேற்பட்ட ஓட்டுகள் உள்ளன.

           காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. காலை 10 மணி அளவில் 360 வாக்குகள் பதிவாகி விட்டன. அதன்பிறகு ஓட்டு போட சென்ற ஒருவர் ஒன்றியக்குழு உறுப்பினருக்கான வாக்குச்சீட்டில் பா.ம.க.வின் சின்னமான மாம்பழம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இதுபற்றி தேர்தல் அலுவலர்களிடம் புகார் செய்தார். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பா.ம.க. சின்னம் இல்லாததால் அங்கு உடனடியாக ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.

VOTE FOR A.K.MOORTHY

மக்களுக்கு நேர்மையாக சேவை செய்ய உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.மக. வேட்பாளர்களுக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள்: ஜி.கே.மணி வேண்டுகோள்

சேலம்:

        உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் நேர்மையாக சேவை செய்ய பயிற்சியளித்து அனுப்புவோம். உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.வுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று மாநில தலைவர் ஜி.கே.மணி வேண்டுகோள் விடுத்து உள்ளார். 
இது தொடர்பாக மாநில தலைவர் ஜி.கே.மணி  வெளியிட்டு உள்ள அறிக்கை:

           தற்போது நடைபெற உள்ள
தேர்தல் நாடாளுமன்ற, சட்டமன்ற பொது தேர்தல் அல்ல. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தேர்தலும் அல்ல. பொதுமக்களின் அடிப்படை தேவைகளை, அன்றாட பிரச்சினைகளை நிறைவேறுவதற்கு உரிய தேர்தல். மத்திய ஆட்சி, மாநில ஆட்சி ஆகியவற்றை போல் உள்ளாட்சி ஒரு அரசாங்க தகுதியுடன் கூடுதல் அதிகாரம், தேவையான நிதி ஆதாரங்களுடன் செயல்படும் நிர்வாக அமைப்பாக இருக்க வேண்டும். 
            மத்திய அரசு ஒரு அடுக்கு, மாநில அரசு ஒரு அடுக்கு, உள்ளாட்சி அரசு ஒரு அடுக்கு என்ற மூன்று அடுக்கு அரசு என்ற நிலை உருவானால்தான் உள்ளாட்சியை நல்லாட்சியாக அதிக அதிகாரங்களுடன் போதுமான அளவு நிதி ஆதாரங்களுடன் நிர்வாகம் செய்ய முடியும். அதற்காக குரல் கொடுத்து போராடி வரும் கட்சிதான் பாட்டாளி மக்கள் கட்சி. உள்ளாட்சியில் வெற்றி பெறும் பா.ம.க. பிரதிநிதிகளுக்கு தைலாபுரம் தோட்டம் பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தில் தலைமைப்பண்புகள், ஆளுமை பண்புகள், குழு இயக்கவியல், சாதனையாளர் என்பது போன்ற தலைப்புகளில் பயிற்சி கொடுக்கப்படும். 
           சுருக்கமாக சொன்னால் இது என் நாடு, என் நாட்டு மக்கள், என் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் என்னால் இயன்ற அளவு சேவை நோக்கத்துடன், அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்று பயிற்சி கொடுத்து பொறுப்பேற்க செய்வோம்.   பா.ம.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் உண்மையாகவும், நேர்மையாகவும் சேவை செய்யவும் பயிற்சியளித்து அனுப்புவோம். எனவே கட்சி வித்தியாசம் பாராமல், உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு வாய்ப்பினை தாருங்கள்.
             ஒரு மாற்றத்தை கொடுங்கள்.  விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், வியாபாரிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், படித்தவர்கள், பண்பாளர்கள், தொழில்முனைவோர் என எல்லா தரப்பினரும் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் அனைத்து பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுங்கள்.

          மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள். வெற்றி பெற செய்யுங்கள். உள்ளாட்சியில் பா.ம.க.வுக்கு ஒரு வாய்ப்பினை தாருங்கள் என அனைத்து வாக்காளர்களையும் பணிவுடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.   

சேலம் மாநகராட்சி பா.ம.க. மேயர் வேட்பாளர் இரா.அருளை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரசாரம்



 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/e6c046c6-8ea7-4864-960e-396bc791dfa1_S_secvpf.gif
 
சேலம்:

        சேலம் மாநகராட்சி மேயர் பா.ம.க. வேட்பாளராக மாநில இளைஞர் அணி செயலாளர் இரா.அருள் நிறுத்தப்பட்டு உள்ளார். இவரை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர்   டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று சேலம் வந்து பிரசாரம் செய்தார்.

அப்போது முன்னாள் மத்திய அமைச்சர்   டாக்டர் அன்புமணி ராமதாஸ்
பேசியது:-

         எங்களது வேட்பாளர்கள் சொன்னதை செய்து தருவார்கள். உங்களுக்காக உழைக்க மேயர் வேட்பாளரான இரா.அருளுக்கு வாக்களித்து அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். மாறி மாறி திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டீர்கள். அவர்கள் ஏதும் செய்து தரவில்லை. அவர்கள் ஏதும் சாதிக்கவில்லை. எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.  நாங்கள் சாதித்து காட்டுகிறோம். அவர்கள் வசனம் மட்டும் பேசி சென்று விடுவார்கள். ஆனால் நாங்கள் சொன்னதை செய்து தந்து பாராட்டு பெறுவோம். சேலம் திருமணிமுத்தாற்றில் முன்பு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதில் மக்கள் குளிப்பார்கள் என கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் இந்த ஆற்றின் இன்றைய நிலை என்ன? இதை நாங்கள் மாற்றி காட்டி பழைய நிலைக்கு கொண்டு வருவோம்.

             சுத்தம் சுகாதாரத்திற்கு முன்னுரிமை தருவோம்.சேலத்தை பசுமை நகராக்க ஒரு வாய்ப்பு தாருங்கள். கொசுவை முற்றிலும் ஒழிப்போம், இந்த ஒரு முறை பா.ம.க.விற்கு வாய்ப்பு தந்து ஓட்டு போடுங்கள். நாங்கள் நல்ல நல்ல திட்டங்களை கொண்டு வருவோம். முதலமைச்சர் ஜெயலலிதா மின்வெட்டு இல்லாமல் செய்வோம் என்றார். இப்போது மின் விட்டு இல்லாமலா? உள்ளது. நாங்கள் இதை சரிசெய்வோம். திராவிட கட்சிகள்ஏதும் மக்களுக்கு செய்யவில்லை. எங்களுக்கு நீங்கள் ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள். மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து காட்டி சாதனை படைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

                இந்த சுற்றுப்பயணத்தின் போது மாநில துணை பொது செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான மு.கார்த்தி, பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் சத்ரியசேகர், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் எம்.பி.சதாசிவம், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் கதிர்ராசரத்தினம், பகுதி செயலாளர் அண்ணாமலை, பூபாலன், பெரியசாமி, பழஅன்பு, ராஜமாணிக்கம், வடக்கு மாவட்ட செயலாளர் சாம்ராஜ், மாநகர் மாவட்ட தலைவர் அன்புக்கரசு, கவுன்சிலர் அருள், எஸ்.பி. ஆறுமுகம், சாம், பழ அன்பு, ராஜமாணிக்கம், திரிசங்கு, பூபதி, மார்க்கெட் சண்முகம், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 

வடலூரில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம்

வடலூர்:

வடலூரில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தேர்தல் பிரசாரம் செய்தார். 
 
அப்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:-

          தமிழகத்தில் பா.ம.க. மட்டுமே வித்தியாசமான கட்சி ஆகும். இதுபோன்ற கட்சி தமிழகத்தில் இல்லை. அப்படிப்பட்ட கட்சி ஏதாவது இருந்தால் நானே அந்த கட்சியில் சேர்ந்துக்கொள்வேன். தமிழகம் முழுவதும் 12 மாவட்டங்களை சுற்றி வந்தேன். பா.ம.க.வுக்கு ஆதரவு பெருகி வருகிறது. திராவிடக்கட்சிகள் கொள்கை இல்லாத கட்சி. அந்த கட்சி மீண்டும் ஆண்டால் தமிழகம் மன்னிக்காது. இலவசங்களை கொடுத்து மக்களை முன்னேற்ற முடியாது. அப்படி முன்னேற்ற முடியும் என்று எந்த அறிஞர்களும் கூற வில்லை.

          இலவசமாக அரிசி, மிக்சி, கிரைண்டர் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்களின் உழைப்பைத்தான் கெடுத்து விட்டார்கள். கிராமம் வளர்ச்சி அடைகிறது என்கிறார்கள். மக்கள் நகரங்களை நோக்கி செல்கிறார்கள். முன்பு கிராமத்தில் 80 சதவீதமாகவும், நகரம் 20 சதவீதமாகவும் இருந்தது. இன்றைக்கு இரண்டும் சமமாக ஆகிற வகையில் நகர்புற வளர்ச்சி அதிகமாக இருக்கிறது.  கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்பது மாறி இன்றைக்கு விளை நிலங்கள் பறிபோகிறது. எதிர்காலத்தில் இந்த நிலை மாற 2016ல் பா.ம.க. ஆட்சி அமைக்கும் வகையில் திட்டம் தீட்டி செயல்படுகிறோம். அதன் மூலம் தமிழகம் வளர்ச்சி பெறும். சாராயம் இல்லாத நகரம் கிராமம். அதன் மூலம் அமையும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார். 

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிகையை விடியோவில் பதிவு செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை:

           உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிகையை விடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக வியாழக்கிழமை  பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை: 

             உள்ளாட்சித் தேர்தல்களை துணை ராணுவப் பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின. இது பற்றிய முடிவை மாநிலத் தேர்தல் ஆணையம் இதுவரை எடுக்கவில்லை.  உள்ளாட்சித் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க 12 மாநிலங்களின் தேர்தல் ஆணையர்கள் பார்வையாளர்களாக அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு தேர்தல் பார்வையாளர்கூட வெளி மாநிலத்திலிருந்து வரவில்லை. 

             உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. எனவே, முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க வாக்கு எண்ணிக்கையை விடியோ பதிவு செய்ய வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பார்வையாளர்களாக அமர்த்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பா.ம.க வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம்

ஜெயங்கொண்டம்:


         ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிடும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். 

பாமகசார்பில் ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் லட்சுமி ரங்கநாதன் உள்ளிட்ட கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அண்ணா  சிலை அருகே பிரசாரத்தின் போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:

              திராவிட இயக்கங்கள் 42 ஆண்டுகளாக மக்களைச் சுரண்டி, கொள்ளையடித்து வருகின்றன. உள்ளாட்சித் தேர்தல் மிகமிக முக்கியமானது. இதில் அதிக இடங்களிள் பாமக வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி போன்றவைகளை நிறைவேற்ற முடியும்.  இப்போது, மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதை 50 சதமாக மாற்ற வேண்டும். பாமக ஆட்சிக்கு வந்தால், உள்ளாட்சி அமைப்பின் அனைத்துப் பொறுப்புகளிலும் பெண்களே இருப்பார்கள் என்றார் அவர். பிரசாரத்தில் கட்சியின் தலைவர் கோ க. மணி, சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. குரு, கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலர் க. வைத்தி, பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.