பொதுக்குழு கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுக்குழு கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முகையூர் ஒன்றிய பா.ம.க.பொதுக்குழுக் கூட்டம்

திருக்கோவிலூர்:

            முகையூர் ஒன்றிய பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அரகண்டநல்லூரில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர்கள் ஆனந்தன், சேனாதிபதி தலைமை தாங்கினார். 

               ஒன்றிய செயலாளர்கள் சுப்ரமணி, வெங்கடேசன் வரவேற்றார். சேகர், ஞானவேல், ஆராமுது, பஞ்சமூர்த்தி, திருநாவுக்கரசு, முருகன், சங்கர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச்செயலாளர் கலிவரதன், மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், சேர்மன் செந்தில்குமார், மாவட்ட தலைவர் செழியன், பாலசக்தி, பொருளாளர் மஞ்சுளா சிறப்புரை நிகழ்த்தினர். ஒன்றிய கவுன்சிலர் ரமணி சிவக்குமார் நன்றி கூறினார்.

பரங்கிப்பேட்டை ஒன்றியம் மற்றும் கிள்ளை பேரூராட்சி பா.ம.க.பொதுக்குழுக் கூட்டம்

கிள்ளை:

            பரங்கிப்பேட்டை ஒன்றியம் மற்றும் கிள்ளை பேரூராட்சி பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம் தில்லைவிடங்கனில் நடந்தது. 

               ஒன்றிய செயலர் ராஜா தலைமை தாங்கினார். நகர செயலர் ரமேஷ் வரவேற்றார். ஒன்றிய தலைவர் தமிழரசன், கிள்ளை நகர தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் இளங்கோவன், சங்கர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலர் வேணுபுவனேஸ்வரன், தலைவர் அன்பழகன், நிர்வாக குழு உறுப்பினர் அகிலாண்ட பிச்சாண்டி உட்பட பலர் பேசினர். ஒன்றிய துணைச் செயலர் சசிகுமார், அமைப்புச் செயலர் புஷ்பராஜ் மற்றும் நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி அமைப்பதில்லை உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கராபுரம் (தெற்கு) ஒன்றிய பா.ம.க. பொதுக் குழு கூட்டம்: ஒன்றிய செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார்

ங்கராபுரம் : 

            விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் பா.ம.க., தெற்கு ஒன்றிய பொதுக் குழு கூட்டம் நடந்தது. 

            ஒன்றிய செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். சுரேஷ், ராஜா, அன்புமணி முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச் செயலாளர் கலிவரதன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பாண்டியன், மாவட்ட தலைவர் அமுத மொழி, மாநில மகளிரணி செயலாளர் காசாம்பூ பூமாலை, ராமு பேசினர். 

சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தகுதியான இடத்தை தேர்வு செய்து தரும்படி தமிழக அரசைக் கேட்டுக் கொள்வது,

மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அரசு நிர்ணயித்த விலை கிடைக்க ஆவன செய்ய வேண்டும். 

நகரில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். சங்கராபுரம் நகரில் பொது மக்களுக்கு நவீன கழிப்பிட வசதி செய்து தர வேண்டும்.
 
கள்ளக்குறிச்சி நகரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமும், 

சங்கராபுரம் நகரை தலைமையிடமாக கொண்டு ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைக்க தமிழக அரசைக் கேட்டுக் கொள்ளுதல் 

உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.

திண்டிவனம் நகர பா.ம.க., பொதுக்குழு கூட்டம்: நகர செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினர்

திண்டிவனம் :

            திண்டிவனம் நகர பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. நகர செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினர். 

             கவுன்சிலர்கள் வடபழனி, ராமன், முரளிதாஸ், சவுந்தர், ஞானவேல் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ஒவியர் ரவி வரவேற்றார். முன்னாள் எம்.பி., தன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்செல்வன், மாநில துணைத் தலைவர் கருணாநிதி, மாவட்ட செயலாளர் மலர் சேகர், தலைவர் சங்கர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வசுந்தரா தேவி, வழக்கறிஞர் பாலாஜி பேசினர். 

           திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுரங்க நடை பாதையை உடனடியாக சீரமைக்க நகராட்சி நடவடிக்கை வேண்டும். 

            திண்டிவனம் நகருக்கு நிரந்தரமான பஸ் நிலையத்தை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 

          செயற்குழு உறுப்பினர் சுப்ராயலு, மரக்காணம் ஒன்றிய துணை சேர்மன் ஜெயகிருஷ்ணன், ஜானகிராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தனலட்சுமி நன்றி கூறினார்.

காட்டுமன்னார்கோவில் (மேற்கு) பா.ம.க.ஒன்றிய பொதுக்குழு கூட்டம்

ஸ்ரீமுஷ்ணம்:

            காட்டுமன்னார்கோவில் (மேற்கு) பா.ம.க., ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நாச்சியார்பேட்டையில் நடந்தது.

            ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் வரதராஜன் வரவேற்றார். மாவட்ட உழவர் பேரியக்க தலைவர் ராமமூர்த்தி, வன்னியர் சங்க தலைவர் சுப்ரமணியன், ஒன்றிய துணை தலைவர் ஜெயபால் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வேணு.புவனேஸ்வரன், மாவட்ட துணை தலைவர் வெற்றிவேல் சிறப்புரையாற்றினர்.

பொதுக்குழு கூட்ட த்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

             உள்ளாட்சி மன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் அனைத்து பதவிகளுக்கும் தனித்து போட்டியிடுதல், 

              ஸ்ரீமுஷ்ணத்தை தனி தாலுகாவாக அறிவிக்க கோருதல்,

             ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் நடந்துவந்த இன்டேன் கேஸ் வினியோகத்தை ஜெயங்கொண்டம் பகுதிக்கு மாற்றிதை கண்டித்தல், 

            புதிய கேஸ் வினியோக மையத்ததை ஸ்ரீமுஷ்ணத்தில் அமைக்க கோருதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

      ஒன்றிய துணை செயலாளர் விஜயரங்கன், ஒன்றிய துணை தலைவர் செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரவி நன்றி கூறினார்.

கடலூர் ஒன்றிய பா.ம.க.பொதுக்குழுக் கூட்டம்: மாநில துணை பொதுச் செயலர் திருமால்வளவன் சிறப்புரை

நெல்லிக்குப்பம் : 

            நடுவீரப்பட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டுமென பா.ம.க. கோரிக்கை விடுத்துள்ளது. கடலூர் ஒன்றிய பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம் வெள்ளக்கரையில் நடந்தது. தணிகாசலம் தலைமை தாங்கினார். சிவகாசி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலர் தட்சணாமூர்த்தி வரவேற்றார். மாநில துணை பொதுச் செயலர் திருமால்வளவன், சண்முகம், அமிர்தலிங்கம், பஞ்சமூர்த்தி சிறப்புரை ஆற்றினர். நடுவீரப்பட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்குக் கடுமையாக உழைப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உள்ளாட்சி தேர்தலில் சிதம்பரம் நகரில் 33 வார்டுகளிலும் பா.ம.க தனித்துப் போட்டி

சிதம்பரம்:

             வரும் உள்ளாட்சி தேர்தலில் சிதம்பரம் நகரில் உள்ள 33 வார்டுகளிலும் தனித்துப் போட்டியிடுவது என நகர பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

             சிதம்பரம் நகர பாமக பொதுக்குழுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளர் முத்து.குமார் தலைமை வகித்தார். நகரத் தலைவர் சு.தட்சிணாமூர்த்தி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் வேணு.புவனேஸ்வரன், ம.அன்பழகன், மூத்த நகர்மன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், அண்ணாமலை நகர் செயலாளர் ச.திருநாவுக்கரசு, மாயவேல், எஸ்.ஆர்.நாகவேல், ப.குருசேவ், அருள்கோவிந்தன், சந்திரமோகன், கோவி.தில்லைநாயகம், ரா.வெங்கடேசன், ரா.குமார், ரா.ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

தீர்மானங்கள்: 

சிதம்பரம் நகரில் அனைத்து வார்டுகளிலும் பாமக கொடியேற்றுவது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, 

உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டியிடுவது என அறிவித்த நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மூவரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெண்ணாடத்தில் நல்லூர் ஒன்றிய பா.ம.க., பொதுக்குழு கூட்டம்

திட்டக்குடி : 

             இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக தர நடவடிக்கை வேண்டும் என பா.ம.க., வலியுறுத்தியுள்ளது. 

               பெண்ணாடத்தில் நல்லூர் ஒன்றிய பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலர் திருமால்வளவன், தேர்தல் பணிக்குழு தலைவர் தனபால், வன்னியர் சங்க துணைத் தலைவர் மோகன், திருஞானம் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலர் தங்கவேல் வரவேற்றார். 

        கூட்டத்தில் அம்பிகா சர்க்கரை ஆலை 2011ம் ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை கால தாமதம் செய்யாமல் உடனே வழங்க கேட்டுக் கொள்வது, 

              நடப்பாண்டில் கரும்பு டன் ஒன்றுக்கு 3ஆயிரம் ரூபாய் வழங்க கேட்பது. 

           ராஜிவ் கொலை வழக்கில் இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோருவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த பாமக பொதுக்குழு கூட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்பு

       

http://www.sivajitv.com/newsphotos/Ramadoss%20Reading%20book.jpg
      
         திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த பாமக பொதுக்குழு கூட்டம் (21.08.2011) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

           மது, திரைப்பட மோகம் ஆகிய கலாச்சார சீரழிவுகளில் இருந்து தமிழகத்தைக் காப்பாற்ற இளைஞர்கள் ஒருகிணைந்து செயல்பட வேண்டும். 44 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் அனைத்து வகையிலும் பின்நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இலவச திட்டங்களை முற்றிலும் நிறுத்தி விட்டு, மேல்படிப்பு வரை கல்வியை இலவசமாக வழங்க வேண்டும்.  பாமக தலைமையிலான அணி உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று மாற்றத்தை ஏற்படுத்தும். அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் பாமக அதிக இடங்களை கைப்பற்றும் என்று தெரிவித்தார்.

மங்களூர் ஒன்றிய பா.ம.க. பொதுக் குழு கூட்டம் : கடலூர் பாராளுமன்ற தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட கோரிக்கை

          வருகிற தேர்தலில் கடலூர் பாராளுமன்ற தொகுதியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட வேண்டும் என்று ராமநத்தத்தில் நடந்த பா.ம.க பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

          மங்களூர் ஒன்றிய பா.ம.க. பொதுக் குழு கூட்டம் ராமநத்தத்தில் நடந்தது. மாநில சொத்து பாதுகாப்பு குழுதலைவர் கோவிந்தசாமி, மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் தனபால், துணை பொது செயலாளர் திருமால்வளவன், மாவட்ட செயலாளர் செல்வராசு, மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் மோகன், மாவட்ட துணை செயலாளர் தங்ககொளஞ்சிநாதன், செயற்குழு உறுப்பினர் குழந்தைவேல், கொள்கை விளக்க செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. 

அவை வருமாறு:

**கூட்டத்தில் மாநில இளைஞரணிதலைவர் டாக்டர் அன்புமணி ராம தாஸ் கடலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும். 

**திராவிட கட்சி களின் தலைமையில் இயங்குவதை விட்டுவிட்டு பா.ம.க. திராவிடக் கட்சிகளுக்கு மாற்று கட்சியாக செயல்படும் என்ற செயல்பாட்டிற்கு வரவேற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தஞ்சை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம்: கோ.ஆலயமணி தலைமைதாங்கினார்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/d37aea5b-71d4-42d4-82bd-66ef7f460786_S_secvpf.gif

 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/5e913b94-fffb-4c80-9e12-bc68ee7b87f8_S_secvpf.gif


கும்பகோணம்:
 
                தஞ்சை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தில் சனிக்கிழமை  மாலை நடை பெற்றது. 
 
             மாநில துணைப் பொதுச் செயலாளர் கோ.ஆலயமணி தலைமை தாங்கினார். தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் கோ.ரவிச்சந்திரன், தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் ரா.கனகராஜ், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.கே.செந்தில்நாதன், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ப.தியாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ம.க. ஸ்டாலின் வரவேற்றார். 
 
               கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் ஜெ.குரு எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி ஏ.பொன்னுசாமி, மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் த.அறிவுச்செல்வன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பானுமதி சத்தியமூர்த்தி, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் மா.ராஜசேகர், மாநில விவசாய சங்க துணை செயலாளர் தி.ஜோதிராஜ், இளைஞர் சங்க செயலாளர் கே.ஆர்.வெங்கட்ராமன், மாநில மாணவர் சங்க துணை செயலாளர் சா.கி.ரவிச்சந்திரன்,மாவட்ட அமைப்பு செயலாளர் துரை.கா.ராஜேந்திரன், அமைப்பு சாரா தொழிற் சங்கதலைவர் பந்தல்கணேசன், கட்டுமான தொழிற்சங்க தலைவர் க.சரவணன், மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் எஸ்.பி.குமார், கே.பி.சி.குமார், மா.வேல்வேந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 
                ஒன்றிய செயலாளர் எம்.கலியமூர்த்தி, டி.எஸ்.சாமிநாதன், ஜெட்.டி.ரமேஷ், எம்.ஏ.குமார், டி.பக்கிரிசாமி, ஏ.பி.எஸ்.கோபு, எம்.கருணாகரன், அ.சி.பன்னீர்செல்வம், குமரேசன், ஜெகதீசன், வடுவையா, ராஜசேகர், மோகன்ராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் தங்க.சின்னதுரை, அ.கருணாகரன், மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.சங்கர், மாவட்ட பொருளாளர் ஈ.மஞ்சுளா ஆகியோர் கலந்து கொண்டனர்.கும்பகோணம் நகர செயலாளர் ஜெயராமன் நன்றி கூறினார். 
 
கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:-  
 
              தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 20 ஆண்டுகளும், திராவிட கட்சிகள் 44 ஆண்டுகளும் ஆட்சி நடத்தியுள்ளது. ஆனால் தமிழக மக்கள் எதிலும் முன்னேற்றம் அடையவில்லை. தமிழக மக்களுக்கு கல்வி கொடுப்பதற்கு பதில் சாராயத்தை கொடுத்தார்கள். இதனால் நாடும், நாட்டு மக்களும் கெட்டு போனார்கள். தமிழக மக்களுக்கு இலவசமாக பல்பொடி வழங்குவதில் தொடங்கி இன்று ஆட்டுகுட்டியில் வந்து நிற்கிறது. இந்த இலவசங்களை நாங்கள் எதிர்க்கிறோம். இதை எதிர்க்க ஒரு தெம்பு, துணிச்சல் வேண்டும்.   
 
                திராவிட கட்சிகளோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை, இனிமேல் தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி தான் ஏற்படும். நமது தலைமையில் தான் கூட்டணி அமையும். தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமான கட்சி தான் பா.ம.க. சாதி கட்சிதான் என்று சிலர் தவறாக நினைத்து கொள்ள வேண்டாம். எல்லா சமுதாய மக்களுக்கும் பா.ம.க. பாடுபட்டு வருகிறது. தமிழக மக்கள் நலனில் கடந்த அரசுகளுக்கு அக்கறை இல்லை. உண்ண உணவு, உடுத்த உடை, உறங்க இடம் என கூறி மக்களை ஏமாற்றியுள்ளனர். ஆனால் கல்வி, பொருளாதாரம், ஆகியவற்றில் நாம் வளர்ச்சி பெறவில்லை. 
 
                 கேரள மாநிலம் 93 சதவீத கல்வி வளர்ச்சி பெற்றுள்ளது. கல்வி கண் தந்த காமராஜருக்கு பிறகு வந்தவர்கள் எல்லாம் குடிப்பதை கற்று கொடுத்து விட்டு சென்றுள்ளனர். இதுதான் வளர்ச்சியா, பண்பாடா? இந்த தமிழ் சமுதாயம் எப்படி பாழ்பட்டு இருக்கிறது.   ஆனால் இதைப்பற்றி யெல்லாம் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கவலைப்படவில்லை. தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்றால், பக்கத்து மாநிலத்தில் உள்ளது என்கிறார்கள், குஜராத்தில் மட்டுமே எப்படி மதுவை ஒழித்தார்கள்? அந்த மாநிலத்தின் அருகில் மட்டும் இதர மாநிலங்கள் இல்லையா? ஒருமாதம் நான் சொல்வதை இந்த அரசு கேட்டால் போதும், நான் கடந்த அரசிடமும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன்.
 
              காமராஜர் படிக்க சொன்னார். மற்றவர்கள் குடிக்க சொன்னார்கள். பிறகு தமிழகம் எப்படி முன்னேறும்? தமிழகத்தில் ஏழை, பணக்காரன், நடுத்தர வர்க்கத்தினர் என மூன்று விதமானோர் உள்ளனர். தரமான கல்வி எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும், சமமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களது லட்சியம்.   கடந்த 2005-ல் ஆக.5,6,7 ஆகிய தேதிகளில் 3 நாள் கருத்தரங்கம் சென்னையில் நடத்தினோம். அதில் தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள், 22 முன்னாள் துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர். அதில் இன்றைய தேவைக்கு ஏற்ப கல்வி, அது சமச்சீர் கல்வி என்பதை கொண்டு வந்தோம். 
 
                நாம்தான் முதன்முதலில் சமச்சீர் கல்வியை கொண்டு வரவேண்டும் என்று குரல் கொடுத்தோம். மற்ற கட்சிகளுக்கு இந்த கொள்கை உண்டா என்றால் இல்லை. தமிழகத்தின் முக்கிய பிரச்சினையான காவிரி பிரச்சினைக்கு காரணமாக இருந்தவர்கள் இருவர்தான். 2 பேரால்தான் காவிரி பிரச்சினை தீரவில்லை. தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தார்கள், ஆனால் தம¤ழர்களின் வறுமை ஒழிந்ததா, மாற்றம் வந்ததா எதுவுமே நடக்கவில்லை. திராவிட கட்சிகள் காலத்தில் தான், தமிழன் எலிக்கறி சாப்பிடும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் அரிசியில் தான் அரசியல் நடத்துகிறார்கள்.   
 
                முன்பு ஒரு ரூபாய்க்கு மூன்று படி என்றார்கள் பின்பு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ என்றார்கள். இப்போது இலவசம் என்கிறார்கள். இவர்கள் அரசியல் நடத்தவில்லை. தமிழக மக்கள் யார் கேட்டார்கள்? இலவச பொருட்கள், அதற்கு பதில் தரமான கல்வி, விவசாய வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியை கொடுத்தால் அதன்மூலம் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்வார்கள். அதனால் தான் கடந்த அரசு தோற்றது. இனி கடலில் நீர் உள்ள அளவும், வானத்தில் மேகம் உள்ள அளவும் பா.ம.க. யாரோடும் கூட்டு வைக்காது. 
 
              வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு நம் பலத்தை நிரூபிப்போம். தமிழகத்தில் பா.ம.க. வால் மட்டுமே கல்வி புரட்சி, தொழில்புரட்சி, விவசாய புரட்சி ஆகியவற்றை ஏற்படுத்த முடியும். சீர்கெட்டுள்ள தமிழகத்தில் சமூக புரட்சி, சமுதாய புரட்சி என மாற்றக்கூடிய வல்லமை பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமே உண்டு. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

வேலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: எம்.எல்.ஏ. கலையரசு வரவேற்புரை


 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/d46e35af-6c0a-422c-801f-e1a41b37d7c6_S_secvpf.gif

வேலூர்:

         வேலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் சத்துவாச்சாரியில் உள்ள திருமண மண்டபத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது.
           லையரசு எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.   மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி வேலு, என்.டி. சண்முகம், இளவழகன், பொன்னுசாமி, மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பா.ம.க.நிறுவனர்
டாக்டர் ராமதாஸ் பேசியது:-

              மாநில பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை வரவேற்பதற்காக இந்த மாவட்ட கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. பா.ம.க. திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்கிற நிலைபாட்டை நடுநிலையாளர்கள் வரவேற்றுள்ளனர்.  இந்த முடிவில் இருந்து எப்போதும் பின்வாங்க மாட்டோம். கடல், மேகம் அழியாத வரை இந்த முடிவில் உறுதியாக இருப்போம்.   1967-ல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. அப்போது காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக திராவிட கட்சிகள் ஏற்படுத்தப்பட்டது.

             அடைந்தால் திராவிட நாடு இல்லாவிட்டால் சுடுகாடு என்ற முழக்கத் துடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் தங்களது கொள் கைகளை சுடுகாட்டுக்கு அனுப்பி விட்டது. 48 ஆண்டுகளாக தமிழகத்தை சீரழித்த திராவிட கட்சிகளை ஒழிப்பதே நமது வேலை அ.தி.மு.க.-தி.மு.க.வில் உள்ளவர்கள் பா.ம.க.வில் சேர தயாராக உள்ளனர்.  திராவிட கட்சிகள் இலவசங்களை தந்து பொது மக்களை ஏமாற்றினர், நிலங்கள் மனைகளாக மாற்றப்பட்டது. இதனால் விவசாயம் அழிந்தது. இதற்கெல்லாம் மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகள் தான் காரணம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த தவறுகளை செய்யமாட்டோம் எந்த விதமான சமரசத்துக்கும் உடன்பட மாட்டோம்.  

              சமச்சீர் கல்விக்காக பா.ம.க. தொடர்ந்து போராடியது. முழுமையாக செயல்படுத்தாததால் அறைகுறையாக உள்ளது. திராவிட கட்சிகள் ஆட்சிக்காலத்தில் கல்வி கொள்ளையர்கள் அதிகரித்து விட்டனர். இந்த கூட்ட தொடரில் தமிழக அரசு மெட்ரிக் பள்ளிகளில் தமிழில் பாடம் நடத்த வேண்டும். தவறினால் பள்ளி அரசுடமையாக்கப்படும் என்ற புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்.   மெட்ரிக்பள்ளிகள் சமச்சீர் கல்வியை ஏற்காமல் சி.பி.எஸ்.சி. தேர்வு முறை அல்லது வேறு கல்வி முறைக்கு மாறினால் பா.ம.க. சார்பில் தீவிர போராட்டம் நடத்தப்படும். பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டி

http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/2a38742c-bd49-4483-b6cf-6015f49bbb41_S_secvpf.gif

செங்கல்பட்டு:

             காஞ்சிபுரம் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் கூடுவாஞ்சேரியில் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் என்.எஸ். ஏகாம்பரம் வரவேற்றார். மோகனசுந்தரம், அரங்க நாதன், கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் பா.ம.க.  நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:-

               மக்களை நம்பித்தான் பா.ம.க.வை துவங்கி உள்ளோம். சமச்சீர் கல்வியை 20 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டுவர நான் போராடினேன். அதை நிறைவேற்றுவதை நான் வர வேற்கிறேன். தமிழகத்தில் விதவைகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அரசு மதுக்கடைகளை திறந்து இளைஞர்களை குடிமகன்களாக்கி வருகிறது. விதவைகள் அதிகரிக்க இதுவே காரணம்.

            பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. 75 கோடியை இறைத்து வெற்றி பெற்றது. ஆனால் நாம் 42 ஆயிரம் ஓட்டுகளை பெற்று 2-ம் இடத்தை பிடித்தோம். அங்கு தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழந்துவிட்டது.  மறைமலைநகர் அருகே துணை நகரம் கொண்டுவர நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அதையும் மீறி தமிழக அரசு இங்கு உள்ள விளை நிலங்களை வெளி நாட்டினருக்கு தாரைவார்த்தது. ஏரி மாவட்டமாக இருந்த காஞ்சீபுரம் மாவட்டம் சோறு போடும் மாவட்டமாகவும் இருந்து வந்தது. தொழிற்சாலைகள், வீட்டு மனைகள் என்ற பெயரில் காஞ்சி மாவட்டத்தையே தமிழக அரசு காடாக மாற்றிவிட்டது.

             ஆடு, மாடுகள் மேய்ந்து வந்த மேய்ச்சல் நிலங்கள் காணவில்லை. விவசாயிகள் நாங்கள் வாழ்வதா சாவதா என அரசை கேள்வி கேட்கின்றனர். உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட உள்ளது. அதற்காக கட்சியில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறுப்பாளர்கள் இன்று முதல் மக்களிடம் சென்று மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து போராட வேண்டும்.  இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

               மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, வன்னியர் சங்க மாநில துணை தலைவர் வ.கோ.ரங்கசாமி, மாசிலாமணி, ஒன்றிய குழு தலைவர் வாசு, மறைமலைநகர் நகரமன்ற தலைவர் சசிகலா ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி:

        கள்ளக்குறிச்சியில் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் 05.08.2011 அன்று மதியம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர். 

அப்போது பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

           கடந்த மாதம் 27ந் தேதி சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வேண்டாம் என்றும், இனிமேல் தனித்துநின்று போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. நமது கொள்கை விரும்பி, மக்களுக்காக போராடும் கட்சி மற்றும் சங்க அமைப்புகள் நமது கூட்டணிக்கு வந்தால் தேர்தலில் போட்டியிடுவோம். இங்கு பேசிய ஒருவர் பா.ம.க. தான் சிறந்த கட்சி என்று கூறினார். இதைத்தான் 3 ஆண்டுகளாக நான் சொல்லிவருகிறேன்.

             மக்களை நம்பி தான், நான் 1989 ல் கட்சியை தொடங்கினேன். ஒரு கட்சி தொடங்குவது மற்றொரு கட்சியை ஆட்சியை அமர்த்துவதற்கு அல்ல. ஆனால் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை நாம் ஆட்சியில் அமர்த்தி வந்தோம். இனி இதுபோன்று கூடாது. எனவேதான் தனித்துப்போட்டியிடுவது என்று முடிவு எடுத்தோம். இதை நல்லவர்கள், படித்தவர்கள், நடுநிலையார்கள், உயர்அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

               தனித்து போட்டி என்ற முடிவை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எடுத்திருந்தால் தற்போது நாம்தான் ஆட்சி நடத்துவோம். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 11 சதவீதம் புதிய வாக்காளர்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். இவர்கள் அ.தி.மு.க.வை விரும்பி வாக்களிக்கவில்லை. தி.மு.க. வரக்கூடாது என்ற எண்ணத்தில்  3 வது அணி இல்லாத காரணத்தால் வாக்களித்தனர். அப்படி 3வது அணியாக நாம் இருந்திருந்தால் நமக்குத்தான் அந்த வாக்குகள் கிடைத்திருக்கும் என்றார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் மூன்றாம் அணி


         http://www.koodal.com/news/2011/july/7-27-2011-51-pmk-general-council-meet-discu.jpg


http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/10586e29-cf76-4459-84ca-4b0a55a07b7c_S_secvpf.gif
          பா.ம.க. தலைமை பொதுக்குழு சென்னையில் நேற்று  நடந்தது.  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் முன்னிலை விகித்தார்.

இக்கூட்டத்தில் பேசிய பா.ம.க. நிர்வாக குழு உறுப்பினர் ஜெயக்குமார்,


            "கடந்த காலங்களில் நாம் பல பாடங்களை, படிப்பினையை பெற்றுள்ளோம். அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப நாம் வெவ்வேறு கூட்டணியில் இடம் பெற்றது சரியான அணுகுமுறைதான். தமிழக தேர்தலில் இனி யாரிடமும் “சீட்” கேட்டு போக தேவையில்லை. நாம் நமது வலிமையை உணராமல் இருக்கிறோம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக போராடுகிற, நமது தலைவர் “சீட்” கொடுப்பவராக இருக்க வேண்டுமே தவிர, அதை கேட்பவராக இருக்க கூடாது.   திராவிட கட்சிகள் தரும் ஏழு, எட்டு சீட்டுக்களை வைத்துக் கொண்டு மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற இயலாது.

            திராவிட கட்சிகளின் அரசியல் இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. திருச்சி சிவா எம்.பி., நம்மை பார்த்து பா.ம.க. பிழைக்க வேண்டும்” என்று கிண்டல் செய்கிறார். நாம் மாற்றி அணி அமைக்க வேண்டும். அதற்கு டாக்டர் ராமதாஸ் தலைமை ஏற்க வேண்டும். அதற்கான முழு தகுதியும், வலிமையும் அவருக்கு உள்ளது.  தமிழ் மக்களை பாதுகாக்க மாற்று அரசு அமைவது அவசியம். தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்கின்றன. ஆனால் மக்களை காப்பாற்றியதாக வரலாறு இல்லை.

            வார்தை ஜாலம், பழி வாங்குவது, இலவசம் வழங்குவது போன்றவற்றையும் இரண்டு திராவிட கட்சிகளும் செய்து வருகின்றன. அப்படிப்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது.  இந்த இரண்டு கட்சிகளின் செயல்பாடுகளால் அடிதட்டு மக்களின் வாழ்க்கை நாசமாகி வருகிறது. மதுவினால் மக்களின் வாழ்க்கை சூறையாடப்படுகிறது.

            இதை எதிர்த்து போராடுவது டாக்டர் ராமதாஸ் மட்டும்தான். முன்னாள், இந்நாள் முதல்வர்களுக்கு இதைப் பற்றி கவலை இல்லை. தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதை தவிர சீர்திருத்த பணியில் அவர்கள் ஈடுபடுவது இல்லை.  எனவே தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி தமிழ்நாட்டில் மாற்று அணி அமைக்க வேண்டும். அதுதான் மக்கள் கூட்டணி’’என்று பேசினார். அவரை தொடர்ந்து பேசிய பலரும் இதே கருத்தை வலியுறுத்தினார்கள்.   

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 

             தலைமை பொதுக்குழு தீர்மானத்தில், கடந்த காலங்களில் தேர்தலுக்காக பா.ம.க கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் தனக்கான கொள்கையை ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. சமரசமும் செய்து கொண்டதில்லை. இடஒதுக்கீட்டுக் கொள்கை, கல்விக் கொள்கை, மொழிக் கொள்கை, வேளாண் கொள்கை, மது ஒழிப்புக் கொள்கை, இளைஞர் நலன்  சார்ந்த  மகளிர் நலன் சார்ந்த கொள்கைகள், சுகாதாரக் கொள்கை, ஈழத்தமிழர் பிரச்சினை, சிறப்புப் பொருளாதார மண்டலம், சில்லரை வணிகம் போன்ற மக்களின் வாழ்வுரிமைக்கான, தமிழக மேம்பாட்டுக்கான நிலைகளில் பா.ம.க ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. குரல்கொடுக்கவும், போராடவும் தயங்கியதில்லை. ஒதுங்கியும் நின்றதில்லை.

எனவே பா.ம.க கீழ்க்காணும் முடிவுகளை அறிவிக்கிறது.

1) தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகளுக்கு மாற்றாக பா.ம.க தலைமையில் மாற்று அணியை உருவாக்கி அதன்வழி தமிழக மக்களின் உரிமைகளுக்காக போராடுவது என உறுதி பூண்டுள்ளது. இக்கொள்கையில் ஏற்புடைய கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் ஆகியவற்றிற்கும், சனநாயக சமத்துவ சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள் போன்றவர்களுக்கும் பா.ம.க தலைமையிலான மாற்று அணியில் சேர பாட்டாளி மக்கள் கட்சி அழைப்பு விடுக்கிறது.

2) நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலிலும், அதன் பிறகு வரும் எல்லா  தர்தல்களிலும், பா.ம.க தலைமையிலான அணியே தேர்தலை சந்திக்கும் என இப்பொதுக்குழு முடிவு செய்கிறது.

3) பா.ம.க தலைமையிலான அணியின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் மிக விரைவில் வெளியிடப்படும் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு பாமக தலைமை பொதுக்குழு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.


       கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, குரு எம்.எல்.ஏ., மாநில பொருளாளர் சையத் அக்பர், மற்றும் நிர்வாகிகள் கோபால், ஜெயராமன், அம்பத்தூர் சேகர், ஜமுனா, அருள், கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் கோ.க. மணி தலைமையில் நடைபெற்றது

       http://www.nakkheeeran.com/UltimateEditorInclude/UserFiles/a/pmk.jpg


http://www.dinamani.com/Images/article/2011/7/28/ramadoss.jpg
 
          
 http://www.makkalmurasu.com/wp-content/uploads/2011/07/ramadoss1.jpg

 http://www.dailythanthi.com/images/news/20110728/First28.jpg

        பாமக பொதுக்குழுக் கூட்டம் பாமக தலைவர் கோ.க. மணி தலைமையில் சென்னையில் நேற்று (ஜுலை 27) நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலை விகித்தார். சின்ன அய்யா  மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வன்னியர் சங்கத் தலைவரும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினருமான மாவீரன் செ.குரு மற்றும்  மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

காஞ்சிபுரம் மேற்கு மற்றும் தெற்கு மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்பு

மாநில துணைப் பொதுச் செயலர் பொன்.கங்காதரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி

          காஞ்சிபுரம் மேற்கு மற்றும் தெற்கு மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம் 21.07.2011 அன்று நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,




          தமிழ்நாட்டில் நடப்பது அரசியலே அல்ல, அரிசியல். ரூபாய்கு 3 படி அரிசி, ரூபாய்க்கு ஒரு படி அரிசி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இப்போது 20 கிலோ இலவச அரிசி என்று அரசியல் இப்போது அரிசியலாக மாறியுள்ளது. இலவச மிக்ஸி கிரைண்டர், டி.வி. கொடுப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. கல்வியும், மருத்துவமும் தவிர வேறு எதையும் இலவசமாக கொடுக்கக்கூடாது. கல்வியை இலவசமாக கொடுத்து, வேலைவாய்ப்பை உருவாக்கினால், இலவசமாக கொடுக்கும் பொருள்களை அவர்களே வாங்கிக் கொள்வார்கள்.

             சங்க காலத்தில் தமிழர்கள் வீரத்துடன் போருக்கு சென்றனர். தற்போது தமிழர்கள் பாருக்கு செல்கின்றனர். கல்விக் கூடங்களை அரசு நடத்த வேண்டும். ஆனால் அது தனியாரிடம் விடப்படுகிறது. ஆனால் டாஸ்மாக் மதுக்கடைகளை அரசு நடத்துகிறது. இதனால்தான் போருக்கு சென்ற தமிழன் பாருக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. விவசாயிகள் பலர் நகப்புறங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.

            விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றப்படுகின்றன. எந்தக் காரணத்துக்காகவும் விவசாய நிலங்களை எடுக்கக் கூடாது என்று நாங்கள் விவசாயிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் பாமக தோல்வி அடைந்ததற்கு பலர் பல்வேறு காரணங்களை கூறினர். இளைஞர்கள் நம் கட்சியில் இருந்திருந்தால் இந்தத் தோல்வி நமக்கு ஏற்பட்டிருக்காது. உடனடியாக அவர்களை கட்சியில் சேர்க்கும் முயற்சியில் இறங்குங்கள் என்றார்.


ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார்




http://www.dailythanthi.com/images/news/20110718/pmk.jpg

சென்னை:

                 ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் தியாகராய நகரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் ஜெயராமன் வரவேற்று பேசினார். அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார்.

           கூட்டத்தில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, மாவட்ட செயலாளர்கள் ரமேஷ், ராம.கண்ணியப்பன், ஏழுமலை, ஜமுனா கேசவன், வி.கே.சேகர், வி.கே.பாண்டியன், வண்ணை சத்யா, சீமான், இளங்கோவன், ஆனந்தன், வக்கீல் பாலு, ரமணி, ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

       "வர இருக்கிற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் குறைந்தது 75 வார்டுகளில் போட்டியிட்டு வார்டுகளை தேர்வு செய்து கட்சி பணிகளை வேகப் படுத்துவது.

       பா.ம.க. இளைஞர் சங்கத்தை வலுப்படுத்த ஒவ்வொரு தொகுதியிலும் 25 வயதுக்குட்பட்ட 10-ம் வகுப்பு தேறிய 500 பேரை உறுப்பினராக சேர்ப்பது.   

        தேர்தலில் அரசியல் கட்சிகள் பணம் செலவழிப் பதை தடுக்க “அரசியல் கட்சிகளும் தேர்தல் செலவுகளும்” என்ற தலைப்பில் மாவட்டம் வாரியாக கருத்தரங்கம் நடத்துவது.

       முதல் கருத்தரங்கம் 24-ந் தேதி வேளச்சேரியில் நடக்கிறது. டாக்டர் ராமதாஸ் பேசுகிறார். 

         வருகிற 25-ந் தேதி பசுமை தாயகம் சார்பில் விபத்து தடுப்பு பற்றிய விழிப்புணர்வு மனித சங்கிலியை மெரினா கடற்கரையில் நடத்துவது.’’ 

சூலை 27ல் பா.ம.க.பொதுக்குழுக் கூட்டம்

             சட்டசபை தேர்தலுக்கு பின், பா.ம.க.,வின் முதல் பொதுக்குழுக் கூட்டம் வரும் 27ம் தேதி சென்னையில் கூடுகிறது.

பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கை:

            பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம், வரும் 27ம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் நடக்கிறது. நிறுவனர் ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். அன்புமணி சிறப்புரை ஆற்றுகிறார். சட்டசபை தேர்தலுக்கு பின் நடைபெறும் முதல் பொதுக்குழுக் கூட்டம். இதற்கு முன், பா.ம.க., மாநில நிர்வாகக் குழுக் கூட்டம், மாநில நிர்வாகிகள் கூட்டம், சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. தற்போது பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.